Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பிகில் இசை வெளியீட்டு விழா... ரசிகர்களுக்கு விஜய் முக்கிய உத்தரவு!
ரசிகர்கள் யாரும் பேனர் தனக்கு வைக்க வேண்டாம் என நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
Recommended Video
சென்னை: தனது பிகில் பட இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ பிடெக் பட்டதாவியாவார். இவர் கனடா நாட்டில் மேற்படிப்பு படிப்பதற்காக தகுதி தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவுகளுக்காக காத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது, பள்ளிகரணை செல்லும் வழியில் எதிர்பாராதவிதமாக விபத்தில் மரணமடைந்தார். சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்ததே விபத்துக்கு காரணம்.
சுபஸ்ரீ மீது பேனர் சரிந்து விழந்ததில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். இதையடுத்து பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன. அரசியல் தலைவர்களும் தங்களது கட்சி தொண்டர்களிடம் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.
Namma Veettu Pillai Trailer: ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது.. ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும்.. சிவா மாஸ்!
இந்நிலையில் நடிகர் விஜய்யும் இதுதொடர்பாக தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். அதில், இனி தனது பட விழாக்களின் போது ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக வரும் 19ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தனது பிகில் பட இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்கள் யாரும் சாலையில் பேனர் வைக்க கூடாது என விஜய் தெரிவித்துள்ளார்.