Don't Miss!
- News அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
நீண்ட நாள் காதல்.. சத்தமில்லாமல் திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி ஜோடி.. அப்ப அடுத்து அவங்க தானா!
பகல் நிலவு சீரியலில் ஜோடியாக நடித்த அன்வரும், சமீராவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் ஜோடியாக நடித்த அன்வரும், சமீராவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
படத்தில் அல்லது சீரியலில் ஒன்றாக நடிக்கும் போது, நிஜமாகவே காதல் வயப்பட்டு ரியல் ஜோடிகளாக மாறும் ரீல் ஜோடிகள் ஏராளம். இதற்கு சின்னத்திரையிலும் சரி, வெள்ளித்திரையிலும் சரி நிறைய தம்பதிகள் உதாரணமாக உள்ளனர்.
சமீபத்தில் கூட, ராஜா ராணி சீரியலில் சேர்ந்து நடித்த சஞ்சீவ் - ஆல்யா மானஸா முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து கடந்த வாரம் மைனா நந்தினியும், யோகேஷ்வரனும் திருமணம் செய்து கொண்டனர்.
அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு.. 12 வருஷ கேப்.. மீண்டும் உச்சநடிகருடன் இணையும் நகைச்சுவை நடிகர்!
இன்ஸ்டா பதிவு
இந்நிலையில் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகர் அன்வரும், நடிகை சமீராவும் கடந்த திங்கட்கிழமை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனை சமீரா ஷெரீஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரீல் ஜோடி
காதலர்களான அவர்கள் பகல் நிலவு சீரியலிலும் ஜோடியாகவே நடித்தனர். அந்த சீரியல் முடிந்த போதே இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறிய இடைவெளி தந்து தற்போது தான் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
மகிழ்ச்சி
இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைப்பெற்றிருக்கும் இத்திருமணத்தில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்கள் திருமண பந்தத்தில் இணைந்து வருவது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
கவிலியா காதல்
அன்வர் - சமீரா திருமணத்தின் மூலம் கவிலியா ரசிகர்களுக்குப் புதிய நம்பிக்கை உண்டாகியுள்ளது. தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து வருவது போல, கூடிய சீக்கிரம் கவின் - லாஸ்லியாவும் இதே போல் நல்ல சேதி சொல்வார்களா என்ற எதிர்பார்ப்பு அவர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் தான் வாயைத் திறப்பேனா என்கிறார்கள்.