Don't Miss!
- Finance JIO: உலகின் டேட்டா ட்ராஃபிக் சாம்பியன்..! சீனாவை ஓடவிட்ட முகேஷ் அம்பானி..!!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தீர்ந்தது பஞ்சாயத்து.. விஜய் டிவி கஸ்தூரிக்கு சம்பள பாக்கிய கொடுத்தாச்சாம்.. அவங்களே சொல்லிட்டாங்க!
சென்னை: விஜய் டிவி தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்துவிட்டதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கஸ்தூரி.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்ட தனக்கு இதுவரை அதற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று தனது சமூக வலைதள பக்கத்தில் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.
முரளிதரன் பயோபிக்கிற்கு வலுக்கும் எதிர்ப்பு.. விஜய் சேதுபதிக்கு எதிராக டிரெண்டாகும் புது ஹேஷ்டேக்!
கவனமாக இருக்கிறோம்
பிக்பாஸ் 4 தொடங்குவதற்கு முன்பாக கஸ்தூரி கூறிய இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கஸ்தூரியின் குற்றச்சாட்டு குறித்து விஜய் டிவி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில் ஒப்பந்த விதிமுறைகளின்படி எங்கள் நிகழ்ச்சிகளில் பணிபுரியும் அனைவருக்கும் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதில் மிகவும் கவனமாக இருக்கிறோம் என்று தெரிவித்தது.
காத்திருக்கிறோம்
மேலும் பிக்பாஸ் தமிழில் கஸ்தூரியின் பங்கேற்புக்கான தொழில்முறை கட்டணம் 2019 சீசனில் அவருக்கு செலுத்தப்பட்டாலும், அதற்கான ஜிஎஸ்டி தொகை அவரது ஜிஎஸ்டி தாக்கல்களில் பொருந்தாததால் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து சில விவரங்கள் மற்றும் ஆவணங்களை பெற நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் கூறியது.
கஸ்தூரி கொடுக்கவில்லை
அது கிடைத்த பிறகு ஜிஎஸ்டி தொகை வழங்கப்படும். சேனலின் மற்றொரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதற்கான இன்வாய்ஸையும் அவர் சமர்ப்பிக்க தவறிவிட்டார், இதன் காரணமாக எங்களால் அந்த கட்டணம் செலுத்த முடியவில்லை என கூறியிருந்தது.
சில்லறை புத்தி
இதனை பார்த்து கடுப்பான கஸ்தூரி, பொய்யை நிஜமென்று ஊரை நம்ப வைப்பது விஜய் டிவிக்கு என்ன புதுசா என கேட்டு விளாசி விட்டார். விஜய் டிவியின் சில்லறை புத்தி இனி செல்லுபடியாகாது என ரொம்பவே காட்டமாக கூறியிருந்தார் கஸ்தூரி.
பாக்கியை கொடுத்துவிட்டார்கள்
கஸ்தூரிக்கும் விஜய் டிவிக்கும் இடையிலான வார்த்தைப் போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய் டிவி கஸ்தூரிக்கு வைத்திருந்த சம்பள பாக்கியை கொடுத்து கணக்கை தீர்த்துள்ளது. இதனை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு வருஷம் கழிச்சு
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், விஜய் டிவி எனக்கு எந்த பாக்கியும் வைக்கலன்னு பிரஸ் ஸ்டேட்மென்ட் குடுத்தாங்களே, அந்த சம்பள பாக்கிய கொடுத்துட்டாங்க. ஒரு வருஷம் தாமதம்தான் ஆனாலும் தீபாவளி நேர செலவுக்காகும், நன்றி விஜய் டிவி எங்கள் குடும்பங்களுக்கு உதவியதற்கு என கூறியுள்ளார்.
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
செருப்பாய் தேய்ந்த பிரித்விராஜ்.. மாஸ் காட்டும் ஆடு ஜீவிதம்.. மகிழ்ச்சியில் படக்குழு!
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி