Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சரவணனையும் மதுமிதாவையும் ஓரங்கட்டிய பிக்பாஸ்.. இல்லாத மாதிரியே முடிச்சுடுவாங்களோ?!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சரவணனையும் மதுமிதாவையும் விஜய் டிவி இப்போது கூட அழைக்காமல் இருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் 15 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர்கள், நடிகர் சரவணன் மற்றும் நடிகை மதுமிதா. இவர்கள் இருவருமே மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றனர்.
அவர்களின் நேர்மையான, கண்ணியமான விளையாட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் இருவருமே எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டனர்.
கொல்லும் கண்கள்.. கவின் நீ காலி.. ப்பா.. என்ன பார்வைடா.. லாஸ்லியா சூப்பர் ரொமான்சிங்!
சரவணன் சர்ச்சை
சரவணன், தன்னுடைய இளவயதில் பேருந்தில் சென்றபோது பெண்களை உரசியதாக கமல் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மன்னிப்பு
இதனைத் தொடர்ந்து அவரை மன்னிப்பு கேட்குமாறு அறிவுறுத்தினார் பிக்பாஸ். தனது பேச்சுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டார் சரவணன்.
வெளியேற்றிய பிக்பாஸ்
ஆனால் அதனையும் ஏற்காத பிக்பாஸ், அவரது கண்களை கட்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார். மன்னிப்பு கேட்ட பிறகும் சரவணனை வெளியேற்றியதால் அதிர்ச்சியடைந்தனர் ரசிகர்கள். சேரனை ஒருமையில் பேசியதே சரவணன் வெளியேற்றத்துக்கு காரணம் என கூறப்பட்டது.
காவிரி பிரச்சனை
இதனை தொடர்ந்து மதுமிதாவும் திடீரென வெளியேற்றப்பட்டார். மதுமிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் காவிரி பிரச்சனை குறித்து பேசியதால் மதுமிதாவிடம் சக ஹவுஸ்மேட்ஸ் பிரச்சனை செய்தனர். மேலும் தமிழ்நாட்டுக்காக உன் உயிரை கொடு எனக் கூறி வற்புறுத்தினர்.
வெளியேற்றப்பட்ட மதுமிதா
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மதுமிதா கத்தியால் தனது கையை கடுமையாக கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை தொடர்ந்து விதியை மீறியதாக, மதுமிதாவை வெளியேற்றினார் பிக்பாஸ்.
மாறி மாறி புகார்
மதுமிதா வெளியே வந்த பிறகும் மதுமிதாவுக்கும் விஜய் டிவிக்குமான பிரச்சனை தொடர்ந்து வருகிறது. மதுமிதா மீது விஜய் டிவியும் விஜய் டிவி மீது மதுமிதாவும் மாறி மாறி போலீஸில் புகார் அளித்துக்கொண்டனர்.
போட்டியாளர்கள்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை பினாலேவை சந்திக்கிறது. இதனை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.
|
இல்லாததுபோல்
ஆனால் இதுவரை மதுமிதாவும் சரவணனும் பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் அழைத்து வரப்படவில்லை. இதனை கவனித்த நெட்டிசன்கள், மதுமிதாவும், சரவணனும் பங்கேற்ற சுவடே இல்லாததுபோல் நிகழ்ச்சியை முடித்துவிடுவார்களோ என கேட்டு வருகின்றனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!