லக்ஷ்மிக்கு நான் பேரன்ட் மாதிரிதான்.. இது என்ன பாரதிக்குள்ள புதிய மாற்றம்?
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா தற்போது பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.
இந்தத் தொடர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரசிகர்களின் பொறுமையை தொடர்ந்து சோதித்து வந்தது.
ஒரே மாதிரியான காட்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்துவந்த இந்தத் தொடர் தற்போது சில பல மாற்றங்களை புகுத்தியுள்ளது.

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரே மாதிரியான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து அவர்களுடைய பொறுமையை அதிகமாக சோதித்து வந்தது. எப்படா முடிப்பீங்க என்று கேள்வி கேட்க வைத்தது.

போதுமடா சாமி
பாரதி மற்றும் கண்ணம்மா, அவர்களது குழந்தைகள் லஷ்மி -ஹேமா என குறுகிய வட்டத்திலேயே சீரியலை கொடுத்து வந்தார் இயக்குநர். அவருக்கு இந்தக் காட்சிகள் சளைத்ததோ இல்லையோ ரசிகர்கள் வெறுத்துத்தான் போனார்கள். ஒரு காலகட்டத்தில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த இந்த சீரியல் போதுமடா சாமி என்ற ரேஞ்சுக்கு ரசிகர்களை யோசிக்க வைத்தது.

சுதாரித்த இயக்குநர்
இதனிடையே கொஞ்சம் போல சுதாரித்த இயக்குநர், பாரதியின் அப்பாவிற்கு கேன்சர், பாரதி ஹாஸ்பிடலில் தீவிரவாதிகள் நுழைவு, அதையொட்டி பாரதி -கண்ணம்மா இடையிலான நெருக்கம் என அடுத்தடுத்த விறுவிறுப்பான காட்சிகளை சீரியலில் புகுத்தி ரசிகர்களை கொஞ்சத்திற்கு கொஞ்சம் ஆசுவாசப்படுத்தினார்.

அடித்துக் கொண்ட மாணவிகள்
இதனிடையே ஹேமா மற்றும் லஷ்மி படிக்கும் பள்ளியில் சக மாணவிகள் அவர்களிடம் வம்பிழுக்க அதையொட்டி அவர்கள் அடித்துக் கொள்ளும்படியான சம்பவம் நடக்கிறது. இதைப் பார்க்கும் ஆசிரியை, அவர்கள் தங்களது பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்று கூறுகிறார்.

பள்ளிக்கு வரும் பாரதி
இதையடுத்து பாரதி பள்ளிக்கு வருகிறார். அவர் ஹேமா சார்பில், அவள் அப்படி செய்திருக்க மாட்டாள் என்றும் சக மாணவிகள் நிக் நேம் வைத்து கூப்பிட்டதால்தான் இந்த சண்டை நேர்ந்ததாகவும் விளக்கம் அளிக்கிறார். வழக்கம் போல கண்ணம்மா வராததால் அழுகையுடன் லஷ்மி பாரதியை பார்க்க, அவர் அவளை விட்டுவிட்டு செல்கிறார்.

லஷ்மிக்கு பெற்றோர் மாதிரி
ஆனால் மனது கேட்காமல் திரும்ப வந்து, லஷ்மிக்கும் ஆசிரியையிடம் உறுதிமொழிக் கொடுக்க முற்படுகிறார். லஷ்மியின் பெற்றோர்தான் இதை செய்ய வேண்டும் என்று ஆசிரியை கூற, தானும் லஷ்மிக்கு பெற்றோர் போலத்தான் என்று கூறுகிறார். இதனால் லஷ்மி அதிகமான ஆனந்தமடைகிறாள். இவ்வாறு இந்த வார ப்ரமோ காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











