Don't Miss!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஆயிரம் அர்த்தங்களுடன் அசத்தல் குட்டிக்கதை.. கண்டிப்பா அரசியல் பேசுவார் விஜய்! ரசிகர்கள் நம்பிக்கை
சென்னை: மாஸ்டர் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் கண்டிப்பாக அரசியல் பேசுவார் என்று நம்புகிறார்கள், அவரது ரசிகர்கள்.
பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
வில்லனாக, விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களுடன் செல்பி
சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடந்தபோது விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து விசாரணை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நெய்வேலிக்கு படப்பிடிப்புக்குச் சென்ற விஜய்யை பார்க்க, திருவிழா போல ரசிகர்கள் கூடினர். அப்போது விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்பி வைரலானது.
குட்டி ஸ்டோரி
இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடலான குட்டி ஸ்டோரி காதலர் தினத்தன்று வெளியானது. விஜய் பாடிய, லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி என்று தொடங்கும் அந்தப் பாடல் வைரல் ஆனது. இந்நிலையில் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை அனைத்தும் முடிந்து, விஜய் சரியாக வரி கட்டியுள்ளார் என்று இப்போது கூறி இருக்கிறது வருமானவரித்துறை.
அரசியல் பேச்சு
இந்த பரப்பரப்பான சூழலில்தான், இன்று நடக்கிறது மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா. காவலனில் இருந்து அவரது ஒவ்வொரு படங்களும் பிரச்னையை சந்தித்து இருக்கின்றன. அதில் எல்லாம் அமைதி காத்து வந்த விஜய், மெர்சலில் அரசியல் பேச்சை ஆரம்பித்து வைத்தார். டிஜிட்டல் இந்தியாவை விமர்சித்ததற்காக அந்தப் படத்தை எதிர்த்திருந்தது பாஜக.
பூக்கடை, பட்டாசு கடை
'சர்காரி'ல் இலவச மிக்ஸி, கிரைண்டரை எறியும் காட்சி சர்ச்சையானது. ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அடுத்து 'பிகில்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் 'யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ...' என்று ஆரம்பித்து அவர் சொன்ன பூக்கடை, பட்டாசு கடை கதை ஆளுங்கட்சியினரை டென்ஷனாக்கியது. அமைச்சர்கள், விமர்சித்தார்கள். இந்த விழாவை நடத்த எப்படி அனுமதி அளித்தீர்கள்? என்று கேட்டு, விழா நடந்த கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியது, அரசு.
அரசியல் நிச்சயம்
இதையடுத்து இன்று, மாஸ்டர் ஆடியோ விழா. இந்த விழாவை மட்டும் விஜய், விட்டு விட்டுவிடுவாரா என்ன? 'கண்டிப்பாக விஜய் அரசியல் பேசுவார். வருமான வரி துறை ரெய்டு தொடர்பாக சில கருத்துக்களை மனம் திறந்து பேசுவார். அதில் அரசியல் நிச்சயம் இருக்கும் என்கிறார்கள் அவருக்கு நெருங்கியவர்கள். இதையேதான் அவர் ரசிகர்களும் சொல்கிறார்கள். அசத்தலான குட்டிக்கதையை, ஆயிரம் அர்த்தங்களுடன் தளபதி சொல்வார் என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள் அவர்கள். பேசுவாரா பார்ப்போம்!