Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விஜய், அஜீத்தின் கட்டிப்புடி!சென்னை: படங்களில் பஞ்ச் டயலாக் மூலம் படு பயங்கரமாக மோதி வந்த தலயும், இளைய தளபதியும், வியாழக்கிழமை நடந்ததிருப்பதி பட பூஜையின்போது, திரையுலகினருக்கும், தங்களது ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.ஏவி.எம். நிறுவன தயாரிப்பில் அஜீத் நடிக்கும் புதிய படம் திருப்பதி. இதை திருப்பாச்சி படத்தை இயக்கிய பேரரசு இயக்குகிறார்.முதலில் திருப்பதி என்ற படத்தின் தலைப்பு விஜய் படத்துக்காக பதிவு செய்து வைக்கப்பட்டிருந்தது.இந்தத் தலைப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று அஜீத் அபிப்பிராயப்பட, உடனடியாக ஏவி.எம். சரவணனும், பேரரசுவும்விஜய்யிடம் பேசி தலைப்பைத் தாரை வார்க்குமாறு கேட்டனர். மறுப்பேதும் சொல்லாத விஜய், உடனடியாக சரி என்று சம்மதம்கொடுத்தார். அத்தோடு நிற்காமல், அஜீத் நடிப்பில் உருவாகப் போகும் திருப்பதி சிறப்பான வெற்றி பெற வேண்டும் என்றும்வாழ்த்தினார்.இதைத் தொடர்ந்து விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய அஜீத், தலைப்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி தெரிவித்தார். இதன் மூலம்நீண்ட காலமாக நிழல் யுத்தம் நடத்தி வந்த இருவருக்கும் இடையிலான மனக் கசப்பு நீங்கியது கண்டு திரையுலகமும், திரைப்படரசிகர்களும் சந்தோஷமடைந்தனர்.இந்த சந்தோஷம் இன்று நடந்த திருப்பதி பட பூஜையின்போது இரட்டிப்பாகியது. பட பூஜைக்கு விஜய்யும் முக்கிய விருந்தினராகஅழைக்கப்பட்டிருந்தார். பூஜைக்கு வந்த அவர் நேராக அஜீத்தை நோக்கிச் சென்று அவரது கையைக் குலுக்கி வாழ்த்துதெரிவித்தார். பின்னர் கட்டிப் பிடித்தும் வாழ்த்து தெரிவித்தார்.இதை சற்றும் எதிர்பார்க்காத, பூஜைக்கு திரண்டிருந்தவர்கள் கை தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர். விடுவார்களாபுகைப்படக்காரர்கள்? இருவரையும் மீண்டும் ஒரு முறை கட்டிப் பிடிக்குமாறு கூறி புகைப்படங்களை எடுத்துத் தள்ளினர்.பின்னர் ஏவி.எம். ஸ்டுடியோவின் மற்றொரு தளத்தில் நடந்த ஈ பட பூஜைக்கு அஜீத்தும், விஜய்யும் சேர்ந்தே சென்றனர். அங்கும்இருவருக்கும் பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. இருவரையும் சேர்ந்து பார்த்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இருவரையும்சேர்ந்தே குத்து விளக்கேற்றுமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.விஜய், அஜீத் இருவரும் மனம் விட்டு கை குலுக்கி, கட்டிப்பிடித்துக் கொண்ட சந்தோஷமான காட்சியைப் பார்த்த திரையுலகினர்,அப்பாடா, இனிமேல் தேவையில்லாத வசனங்களை படங்களில் பார்க்க வேண்டியிருக்காது என்று சந்தோஷப்பட்டுக்கொண்டனர்.
சென்னை:
படங்களில் பஞ்ச் டயலாக் மூலம் படு பயங்கரமாக மோதி வந்த தலயும், இளைய தளபதியும், வியாழக்கிழமை நடந்ததிருப்பதி பட பூஜையின்போது, திரையுலகினருக்கும், தங்களது ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
ஏவி.எம். நிறுவன தயாரிப்பில் அஜீத் நடிக்கும் புதிய படம் திருப்பதி. இதை திருப்பாச்சி படத்தை இயக்கிய பேரரசு இயக்குகிறார்.முதலில் திருப்பதி என்ற படத்தின் தலைப்பு விஜய் படத்துக்காக பதிவு செய்து வைக்கப்பட்டிருந்தது.
இந்தத் தலைப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று அஜீத் அபிப்பிராயப்பட, உடனடியாக ஏவி.எம். சரவணனும், பேரரசுவும்விஜய்யிடம் பேசி தலைப்பைத் தாரை வார்க்குமாறு கேட்டனர். மறுப்பேதும் சொல்லாத விஜய், உடனடியாக சரி என்று சம்மதம்கொடுத்தார். அத்தோடு நிற்காமல், அஜீத் நடிப்பில் உருவாகப் போகும் திருப்பதி சிறப்பான வெற்றி பெற வேண்டும் என்றும்வாழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய அஜீத், தலைப்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி தெரிவித்தார். இதன் மூலம்நீண்ட காலமாக நிழல் யுத்தம் நடத்தி வந்த இருவருக்கும் இடையிலான மனக் கசப்பு நீங்கியது கண்டு திரையுலகமும், திரைப்படரசிகர்களும் சந்தோஷமடைந்தனர்.
இந்த சந்தோஷம் இன்று நடந்த திருப்பதி பட பூஜையின்போது இரட்டிப்பாகியது. பட பூஜைக்கு விஜய்யும் முக்கிய விருந்தினராகஅழைக்கப்பட்டிருந்தார். பூஜைக்கு வந்த அவர் நேராக அஜீத்தை நோக்கிச் சென்று அவரது கையைக் குலுக்கி வாழ்த்துதெரிவித்தார். பின்னர் கட்டிப் பிடித்தும் வாழ்த்து தெரிவித்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத, பூஜைக்கு திரண்டிருந்தவர்கள் கை தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர். விடுவார்களாபுகைப்படக்காரர்கள்? இருவரையும் மீண்டும் ஒரு முறை கட்டிப் பிடிக்குமாறு கூறி புகைப்படங்களை எடுத்துத் தள்ளினர்.
பின்னர் ஏவி.எம். ஸ்டுடியோவின் மற்றொரு தளத்தில் நடந்த ஈ பட பூஜைக்கு அஜீத்தும், விஜய்யும் சேர்ந்தே சென்றனர். அங்கும்இருவருக்கும் பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. இருவரையும் சேர்ந்து பார்த்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இருவரையும்சேர்ந்தே குத்து விளக்கேற்றுமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.
விஜய், அஜீத் இருவரும் மனம் விட்டு கை குலுக்கி, கட்டிப்பிடித்துக் கொண்ட சந்தோஷமான காட்சியைப் பார்த்த திரையுலகினர்,அப்பாடா, இனிமேல் தேவையில்லாத வசனங்களை படங்களில் பார்க்க வேண்டியிருக்காது என்று சந்தோஷப்பட்டுக்கொண்டனர்.