Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
சென்னை:
திருட்டு விசிடி ஒழிப்புக்கு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம்நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், புதன்கிழமை ஜெயலலிதாவை அவரது போயஸ் இல்லத்திற்குச் சென்றுசந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது திருட்டு விசிடியின் புழக்கம் தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருப்பது குறித்து கவலை தெரிவித்தார்.
தற்போதுள்ள சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் திருட்டு விசிடி தயாரிப்பாளர்கள் எளில் வெளியில் வந்துவிடுவதாக கூறிய அவர் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர், தமிழ் சினிமாவில் நலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஜெயலலிதாவிடம் அவர்எடுத்துரைத்தார்.
ஜெயலலிதாவைச் சந்தித்து விட்டுத் திரும்பிய அவர் நடிகர் சங்கத்திற்கு விரைந்தார். அங்கு நடிகர், நடிகையரிடம்தான் ஜெயலலிதாவிடம் பேசியவை குறித்து விளக்கினார். முதல்வரையும் விரைவில் சந்திக்க விஜயகாந்த் முடிவுசெய்துள்ளார்.