திரைத் துளி
சென்னை:
திருட்டு விசிடி ஒழிப்புக்கு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம்நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், புதன்கிழமை ஜெயலலிதாவை அவரது போயஸ் இல்லத்திற்குச் சென்றுசந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது திருட்டு விசிடியின் புழக்கம் தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருப்பது குறித்து கவலை தெரிவித்தார்.
தற்போதுள்ள சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் திருட்டு விசிடி தயாரிப்பாளர்கள் எளில் வெளியில் வந்துவிடுவதாக கூறிய அவர் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர், தமிழ் சினிமாவில் நலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஜெயலலிதாவிடம் அவர்எடுத்துரைத்தார்.
ஜெயலலிதாவைச் சந்தித்து விட்டுத் திரும்பிய அவர் நடிகர் சங்கத்திற்கு விரைந்தார். அங்கு நடிகர், நடிகையரிடம்தான் ஜெயலலிதாவிடம் பேசியவை குறித்து விளக்கினார். முதல்வரையும் விரைவில் சந்திக்க விஜயகாந்த் முடிவுசெய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











