Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விஜயகாந்த் ராஜாவாம்.. மகனுக்கு முக்கிய வேடமாம்.. தமிழன் என்று சொல்!
சென்னை: மகன் சண்முகப் பாண்டியனுடன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் தமிழன் என்று சொல் படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
சகாப்தம் படத்திற்குப் பின்னர் நடிகர் சண்முகப் பாண்டியன் தனது 2 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் அருண் பொன்னம்பலம் இயக்க ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.
இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது இதில் விஜயகாந்த், சண்முகப்பாண்டியன், பிரேமலதா, சுதீஷ்,அருண் பொன்னம்பலம் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இது ஒரு சரித்திரப் பின்னணியிலான படமாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. தமிழர்களின் வரலாற்றை சித்தரிக்கும் படமென்பதால் தான் இப்படத்திற்கு தமிழன் என்று சொல் என்ற பெயரை சூட்டியிருக்கின்றனராம்.
விஜயகாந்த் ராஜாவாக நடிக்கும் இந்தப்படத்தில் அவரது மகன் சண்முகப் பாண்டியன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறுகின்றனர். 5 ஆண்டுகளுக்குப் பின்னர் விஜயகாந்த் நடிக்கும் படமென்பதால் அவரது ரசிகர்களிடையே படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.