Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிவாஜி குடும்பம் விஜயகாந்திற்க்கு கடமைப்பட்டுள்ளது... பிரபு நெகிழ்ச்சி
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார் பிரபு.
பிரபு மட்டுமின்றி அவருடைய மகன் விக்ரம் பிரபுவும் அதில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் பற்றி பிரபு ஒரு நிகழ்வில் பேசியிருப்பது தற்சமயம் வைரலாகியுள்ளது.
பொன்னியின் செல்வனா? பாகுபலியா?..கோலிவுட்-டோலிவுட் ரசிகர்கள் மோதல்..கவலையில் திரையுலகினர்
மணிரத்னம் பிரபு
தற்சமயம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூதி விக்ரமகேசரி என்கிற சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிரபு. அக்னி நட்சத்திரம், அஞ்சலி, ராவணன் திரைப்படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொன் நிற குதிரை
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்களிலேயே குதிரை சவாரியில் அதிக அனுபவம் உடையவர் நடிகர் பிரபுதானாம். அதனால் அவருக்கு வரவழைக்கப்பட்ட குதிரை பொன் நிறத்தில் கம்பீரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். படத்தில் நடித்த மற்ற நடிகர்களே அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குதிரையை பிரம்மிப்புடன் பார்த்ததாக பேட்டியில் கூறியிருக்கின்றனர் .அதுமட்டுமின்றி இந்தப் படத்திற்காக பிரபு உடல் எடையை குறைத்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்தின் செயல்
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறந்ததை கேள்விப்பட்டு முதலில் அவரது இல்லத்திற்கு சென்றவர் நடிகர் விஜயகாந்த்தானாம். சிவாஜியின் மகன்களான பிரபு மற்றும் ராம்குமார் செய்வதறியாது கலங்கி நின்றபோது, நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் அவருடைய இறுதி சடங்கு தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக மட்டும் அமைந்து விடக் கூடாது என்றும் அனைவரும் சேர்ந்து வழி அனுப்ப வேண்டும் என்றும் அப்போது நடந்த சடங்குகள் அனைத்தையும் தனி ஆளாக ஏற்பாடு செய்திருந்தாராம். இன்றும் கூட திரைப் பிரபலங்கள் அதனை பற்றி பெருமையாக கூறுவார்கள்.
பிரபு நன்றிக்கடன்
அதன் பிறகு விஜயகாந்த் தொடர்பாக சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்பொழுது, நான் என்னுடைய அப்பா சிவாஜி கணேசன் அவர்கள் தயவால் சிரமம் இல்லாமல் நடிகனாகி விட்டேன். ஆனால் விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் சிரமப்பட்டுத்தான் நடிகர்களாக வந்தார்கள். அவர் தேர்வு செய்த படங்கள் எனக்கு, சத்யராஜ் போன்ற சம காலத்து நடிகர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. அது மட்டுமின்றி பல தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தியதும் அவர்தான். அவர் குடும்ப நிகழ்ச்சிக்கு யார் அழைத்தாலும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கலந்து கொள்வோம் என்று பிரபு நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். இருவரும் இணைந்து காலையும் நீயே மாலையும் நீயே, நம்பினார் கெடுவதில்லை போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருப்பது கூடுதல் தகவல்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!