Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் டெபாசிட் இழப்பது உறுதி-வடிவேலு
திமுக வேட்பாளர்களுக்காக தீவிரப் பிரசாரம் செய்து, விஜயகாந்த்தை மட்டும் குறி வைத்து தாறுமாறாகப் பேசி விமர்சனம் செய்து வருகிறார் வடிவேலு. இதனால் தேமுதிகவினர் கடும் கொதிப்புடன் உள்ளனர். இருப்பினும் விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிவினர் ஒட்டுமொத்தமாக அமைதி காத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை சிதம்பரம் சென்ற வடிவேலு அங்கு முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் கடலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், என்னை வெடிகுண்டு வைத்துக் கொன்று விடுவார்கள் என பயமுறுத்துகிறார்கள். அதற்கெல்லாம் நான் பயப்படவில்லை. அய்யா கலைஞர் போட்டுள்ள திட்டங்கள்தான் அவர்களுகக்கு வெடிகுண்டுகள். அதில் அவர்கள்தான் சிக்கிக் கொள்ளப் போகிறார்கள்.
அய்யா கலைஞரும், பொதுமக்களும் எனக்குத் துணையாக, பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் இருக்கும் வரை எந்த பாமும் என்னை ஒன்றும் செய்யாது. எனது நிழலைக் கூட அவர்களால் தொட முடியாது.
ரிஷிவந்தியத்தில் இப்போது நிற்கிறார் அவர். இனிமேல்தான் அங்கு சூடு பிடிக்கப் போகிறது. விருத்தாச்சலத்தில் ஏற்கனவே போட்டியிட்டபோது பாலாறு ஓடும், தேனாறு ஓடும் என்றார். ஆனால் ஒரு ஆறும் ஓடவில்லை.
சட்டசபைத் தேர்தலில் வாங்கிய ஓட்டுக்களில் பாதியைக் கூட கடந்த லோக்சபா தேர்தலில்அங்கு தேமுதிக வேட்பாளர் வாங்கவில்லை. இப்போது ரிஷிவந்தியத்தில் சுத்தமாக துடைத்தெடுக்கப் போகிறார்கள். ஒன்றும் கிடைக்காது. டெபாசிட் கூட மிஞ்சாது.
அண்ணா, காமராஜர், பெரியார் ஆகியோரின் ஒட்டுமொத்த உருவம்தான் கலைஞர். அவரை மக்கள் மீண்டும் முதல்வராக்குவது உறுதி என்றார் வடிவேலு.
பின்னர் காட்டுமன்னார்கோவில், விருத்தாச்சலம், புவனகிரியில் பிரசாரம் மேற்கொண்டார் வடிவேலு.