Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரஜினி மற்றும் விஜயகாந்தை சந்தித்து பாஜகவிற்கு ஆதரவு கேட்பேன்- விஜயகுமார்
சென்னை: கட்சி உத்தரவிட்டால் ரஜினி மற்றும் விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்பேன் என்று நடிகர் விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்.
தமிழின் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயகுமார் நேற்று பாஜக அரசியல் தலைவர்களை சந்தித்து, அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தனது திடீர் அரசியல் பிரவேசம் குறித்து கட்சியில் சேர்ந்த பின்னர் நடிகர் விஜயகுமார் பேட்டி அளித்திருக்கிறார்.
மக்கள் நலனில்
"நான் கட்சியில் சேர்ந்ததன் அடிப்படை காரணம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான். அரசியலில் இருந்தால், மக்களுக்கு பல வழிகளில் உதவி செய்யலாம். அதனால் தான் அரசியலில் என்னை இணைத்துக் கொண்டேன்.ஊழலற்ற மற்றும் மக்களின் நலனில் அக்கறை உள்ள ஒரே கட்சி பா.ஜ.க. தான். மோடி சொன்னபடி ஊழலற்ற ஆட்சி மத்தியில் நடந்து கொண்டு இருக்கிறது. எனவே தான் பா.ஜனதாவில் என்னை இணைத்துக் கொண்டேன்.
பதவி வேண்டாம்
நான் இங்கு எந்த பதவியையும் எதிர்பார்த்து வரவில்லை. தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு விருப்பமும் இல்லை. பா.ஜ.க. வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வேன்.
பாஜக மலரும்
தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி மலர்வது தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வெற்றியாகும். பாஜகவிற்கு ஆதரவு கேட்டு ரஜினி, விஜயகாந்தை சந்திக்கும் எண்ணம் எனக்கில்லை.ஆனால் கட்சித்தலைமை உத்தரவிட்டால் அவர்கள் இருவரையும் நான் சந்தித்து ஆதரவு கேட்பேன்.
பணத்திற்காக வாக்களிக்க
என்னுடைய மகன் பாஜகவிற்கு ஆதரவு கொடுப்பாரா? என்பதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்."பணத்திற்காக வாக்களிக்காதீர்கள். நமக்கு யார் நல்ல ஆட்சி தருவார்கள் என்பதனை சிந்தித்து வாக்களியுங்கள்" என்பதை வாக்காளர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்" இவ்வாறு விஜயகுமார் தனது திடீர் அரசியல் பிரவேசம் குறித்து தெரிவித்திருக்கிறார்.