Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ரஜினி மற்றும் விஜயகாந்தை சந்தித்து பாஜகவிற்கு ஆதரவு கேட்பேன்- விஜயகுமார்
சென்னை: கட்சி உத்தரவிட்டால் ரஜினி மற்றும் விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்பேன் என்று நடிகர் விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்.
தமிழின் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயகுமார் நேற்று பாஜக அரசியல் தலைவர்களை சந்தித்து, அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தனது திடீர் அரசியல் பிரவேசம் குறித்து கட்சியில் சேர்ந்த பின்னர் நடிகர் விஜயகுமார் பேட்டி அளித்திருக்கிறார்.
மக்கள் நலனில்
"நான் கட்சியில் சேர்ந்ததன் அடிப்படை காரணம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான். அரசியலில் இருந்தால், மக்களுக்கு பல வழிகளில் உதவி செய்யலாம். அதனால் தான் அரசியலில் என்னை இணைத்துக் கொண்டேன்.ஊழலற்ற மற்றும் மக்களின் நலனில் அக்கறை உள்ள ஒரே கட்சி பா.ஜ.க. தான். மோடி சொன்னபடி ஊழலற்ற ஆட்சி மத்தியில் நடந்து கொண்டு இருக்கிறது. எனவே தான் பா.ஜனதாவில் என்னை இணைத்துக் கொண்டேன்.
பதவி வேண்டாம்
நான் இங்கு எந்த பதவியையும் எதிர்பார்த்து வரவில்லை. தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு விருப்பமும் இல்லை. பா.ஜ.க. வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வேன்.
பாஜக மலரும்
தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி மலர்வது தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வெற்றியாகும். பாஜகவிற்கு ஆதரவு கேட்டு ரஜினி, விஜயகாந்தை சந்திக்கும் எண்ணம் எனக்கில்லை.ஆனால் கட்சித்தலைமை உத்தரவிட்டால் அவர்கள் இருவரையும் நான் சந்தித்து ஆதரவு கேட்பேன்.
பணத்திற்காக வாக்களிக்க
என்னுடைய மகன் பாஜகவிற்கு ஆதரவு கொடுப்பாரா? என்பதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்."பணத்திற்காக வாக்களிக்காதீர்கள். நமக்கு யார் நல்ல ஆட்சி தருவார்கள் என்பதனை சிந்தித்து வாக்களியுங்கள்" என்பதை வாக்காளர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்" இவ்வாறு விஜயகுமார் தனது திடீர் அரசியல் பிரவேசம் குறித்து தெரிவித்திருக்கிறார்.