Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
12 ஆண்டுகளுக்குப்பின் சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் விஜயசாந்தி?
ஹைதராபாத்: 12 வருடங்களுக்குப் பின் விஜயசாந்தி மீண்டும் தனது நடிப்பு பிரவேசத்தை தொடரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்த விஜயசாந்தி கடைசியாக 2004ம் ஆண்டு வெளியான 'நாயுடம்மா' படத்திற்குப் பின் நடிப்பிற்கு முழுக்குப் போட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார்.
இந்நிலையில் சிரஞ்சீவி நடித்து வரும் 'கத்திலண்டோடு' படத்தில், சிறப்புத் தோற்றத்தில் விஜயசாந்தியை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
இப்படத்தில் நடிக்க விஜயசாந்தி சம்மதித்து விட்டதாகவும், இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிரஞ்சீவி-விஜயசாந்தி இணைந்து ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்துள்ளனர். எனினும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக 'மெக்கானிக் அல்லுடு' படத்திற்குப் பின் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை.
விஜயசாந்தி போன்றே அரசியலுக்கு சென்ற சிரஞ்சீவி 9 வருடங்களுக்குப்பின் மீண்டும் தனது நடிப்புப் பிரவேசத்தைத் தொடங்கியிருக்கிறார் என்பதால், இப்படத்தில் விஜயசாந்தி நடித்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்று படக்குழு கருதுகிறதாம்.
'கத்திலண்டோடு' சிரஞ்சீவியின் 150 வது படமென்பது குறிப்பிடத்தக்கது.