Don't Miss!
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
தெலுங்கானா இல்லேன்னா நானும் சந்திரசேகர் ராவும் தற்கொலை பண்ணிக்குவோம்! - விஜயசாந்தி
ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க கோரி தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் முன்னணித் தலைவரும், எம்.பி.யுமான நடிகை விஜயசாந்தி நேற்று ஹைதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த மாநில மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், "தெலுங்கானா தனி மாநிலத்திற்காக மாணவர்கள் பலர் உயிர்த்தியாகம் செய்து வருகிறார்கள். இது நல்ல தல்ல. தெலுங்கானா அமைப்ப தற்கு உயிர்த்தியாகம்தான் தேவை என்றால் நான் தற்கொலை செய்யத் தயாராக இருக்கிறேன். எனக்கு பிறகு கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் தற்கொலை செய்வார்.
தனி மாநில போராட்டத்தை முடக்க மத்திய - மாநில அரசுகள் சதித் திட்டம் தீட்டி செயல்படுகின்றன. அதை தெலுங்கானா பெண்கள் முறியடிக்க வேண்டும். தெலுங்கானா தனி மாநிலம் அமைந்தால், அதை இந்தியாவிலேயே முதன்மை மாநில மாக மாற்றிக் காட்டுவோம்.
மத்திய அரசு பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது. அம் மசோதாவை நிறைவேற்ற பெண்கள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்," என்றார்.