Don't Miss!
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஜயகாந்தின் "கருப்புப் படையை கண்காணிக்கும் போலீஸ் நடிகர் விஜயகாந்தின் தொண்டர் படையை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டுப் பணிகளில் நடிகர் விஜயகாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சுமார்3 லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல் போடப்பட்டு வருகிறது. மாநாட்டுப் பந்தலிலேயே பேரணியும் நடத்ததிட்டமிட்டுள்ளார்.தனது மன்றத்தில் வழக்கறிஞர் அணி, இளைஞர் அணி, மாணவரணி, நெசவாளர் அணி, விவசாயிகள் அணி, தொழிலாளர்அணி, இலக்கிய அணி என ஒரு பக்கா அரசியல் கட்சியில் இருப்பது போன்று அனைத்து அணிகளையும் விஜயகாந்த்உருவாக்கியுள்ளார்.இந்த அணிகளுக்கு தனித்தனி சீருடையும், பல்வேறு விதமான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்குஅடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது.விஜயகாந்தின் இந்த அணிகளை விட இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பது தொண்டர் படை தான். தனதுகட்சிக்கு திமுகவில் இருப்பதை விட உறுதியான தொண்டர் படையை உருவாக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே விஜயகாந்த்திட்டமிட்டிருந்தார்.இதன்படி பக்காவான ஒரு தொண்டர் படையை அவர் உருவாக்கி வருகிறார். இந்தப் படையிலுள்ளவர்களுக்கு கருப்பு பேண்ட்,அதே நிறத்தில் சட்டை,தொப்பி, ஷூ என எல்லாமே கருப்பு தான்.ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸைப் போல தலைமுடியை ஒட்ட வெட்டி, தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என பல விதிமுறைகள் இந்த தொண்டர் படைக்கு உண்டு.கருப்புப் படை என்று அழைக்கப்படும் இந்த தொண்டர் படையில் இரு பிரிவுகள் இருக்கிறது. ஒரு பிரிவு கூட்டத்தைக்கட்டுப்படுத்துதல், வரிசைப் படுத்துதல், தொண்டர்களுக்கு அவசர காலத்தில் உதவுதல் உட்பட சமூக சேவைப் பணிகளிலும்,இன்னொரு பிரிவு விஜயகாந்த், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில்ஈடுபடும்.இந்த தொண்டர் படையில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டுப் பணியில் 600க்கும்மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இவர்களுக்கு ஓய்வு பெற்ற ஒரு ராணுவ அதிகாரியின் மூலம் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.விஜயகாந்தின் இந்த கருப்புப் படையின் செயல்பாடுகளை தமிழக போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருவதாககூறப்படுகிறது.
நடிகர் விஜயகாந்தின் தொண்டர் படையை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.
செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டுப் பணிகளில் நடிகர் விஜயகாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சுமார்3 லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல் போடப்பட்டு வருகிறது. மாநாட்டுப் பந்தலிலேயே பேரணியும் நடத்ததிட்டமிட்டுள்ளார்.
தனது மன்றத்தில் வழக்கறிஞர் அணி, இளைஞர் அணி, மாணவரணி, நெசவாளர் அணி, விவசாயிகள் அணி, தொழிலாளர்அணி, இலக்கிய அணி என ஒரு பக்கா அரசியல் கட்சியில் இருப்பது போன்று அனைத்து அணிகளையும் விஜயகாந்த்உருவாக்கியுள்ளார்.
இந்த அணிகளுக்கு தனித்தனி சீருடையும், பல்வேறு விதமான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்குஅடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் இந்த அணிகளை விட இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பது தொண்டர் படை தான். தனதுகட்சிக்கு திமுகவில் இருப்பதை விட உறுதியான தொண்டர் படையை உருவாக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே விஜயகாந்த்திட்டமிட்டிருந்தார்.
இதன்படி பக்காவான ஒரு தொண்டர் படையை அவர் உருவாக்கி வருகிறார். இந்தப் படையிலுள்ளவர்களுக்கு கருப்பு பேண்ட்,அதே நிறத்தில் சட்டை,தொப்பி, ஷூ என எல்லாமே கருப்பு தான்.
ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸைப் போல தலைமுடியை ஒட்ட வெட்டி, தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என பல விதிமுறைகள் இந்த தொண்டர் படைக்கு உண்டு.
கருப்புப் படை என்று அழைக்கப்படும் இந்த தொண்டர் படையில் இரு பிரிவுகள் இருக்கிறது. ஒரு பிரிவு கூட்டத்தைக்கட்டுப்படுத்துதல், வரிசைப் படுத்துதல், தொண்டர்களுக்கு அவசர காலத்தில் உதவுதல் உட்பட சமூக சேவைப் பணிகளிலும்,
இன்னொரு பிரிவு விஜயகாந்த், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில்ஈடுபடும்.
இந்த தொண்டர் படையில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டுப் பணியில் 600க்கும்மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவர்களுக்கு ஓய்வு பெற்ற ஒரு ராணுவ அதிகாரியின் மூலம் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் இந்த கருப்புப் படையின் செயல்பாடுகளை தமிழக போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருவதாககூறப்படுகிறது.