twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டாப் கியரில் கேப்டன்! ரசிகர்களுக்கு 2 மாத கெடு! ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் வேறு கட்சிகளில், சாதி அமைப்புகளில், அரசியல் தொடர்பான பிற அமைப்புகளில்உறுப்பினர்களாக இருந்தால் இன்னும் 2 மாதத்திற்குள் அவற்றிலிருந்து வெளியே வந்து விட வேண்டும் என தனது ரசிகர்களுக்குநடிகர் விஜயகாந்த் கெடு விதித்துள்ளார்.மதுரையில் ரசிகர்களுடன் கலந்தாலோசனையில் கலந்து கொண்ட நடிகர் விஜயகாந்த் கோவையில் முகாமிட்டு 7மாவட்டங்களைச் சேர்ந்த மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், இதுவரை எனது ரசிகர்கள் யாருக்குவேண்டுமானாலும் ஓட்டுப் போட்டிருக்கலாம். இனிமேல் அப்படி இருக்க முடியாது. மன்ற மாநாடு ஆரம்பிப்பதற்குள், அதாவது இன்னும் 2 மாதத்திற்குள், வேறு கட்சிகளில், ஜாதி அமைப்புகளில் இருக்கும்ரசிகர்கள் அதிலிருந்து வெளியே வந்து விட வேண்டும். மன்றப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.ரசிகர்களை நம்பி மட்டுமே அரசியலில் இறங்குகிறேன். வேறு யாரையும் நான் நம்பவில்லை. மக்களுக்கு உதவி செய்யவேண்டும், சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்து விட்டுத் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில்லை.நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன், எத்தனை தொகுதிகளில் எனது கட்சி போட்டியிடும் என்பது குறித்து இப்போதுஎதுவும் கூற முடியாது. கட்சியின் கொள்கை குறித்து மாநாட்டில் அறிவிக்கப்படும்.சட்டசபைத் தேர்தலில் எனது கட்சி தனித்தே போட்டியிடும். யாருடனும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். அரசியலுக்கு வருவதால் நடிப்பை கைவிட மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். இருப்பினும் பதவிக்கு வந்து விட்டால் நடிக்கமாட்டேன். கட்சியில் எனது மனைவிக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்பட மாட்டாது என்றார் விஜயகாந்த்.இதற்கிடையே, ரசிகர் மன்றக் கொடியே கட்சிக் கொடியாகவும் இருக்கும் என்று விஜயகாந்த் அறிவித்து விட்டதால் ரசிகர்கள்உற்சாகமடைந்துள்ளனர். மதுரை மாநாடு தொடர்பான சுவர் விளம்பரங்களில், ரசிகர் மன்றக் கொடியை பெரிய அளவில்அவர்கள் வரைந்து வைக்கவில்லை. இதற்குக் காரணம், புதிதாக கொடி அறிமுகப்படுத்தப்பட்டால் அதை எங்கே வரைவது என்பது தான். தற்போது மன்றக் கொடியேகட்சிக் கொடி என்று கேப்டன் அறிவித்து விட்டதால் புது உற்சாகத்துடன் கொடியை வரைந்து வருகிறார்கள் அவரது ரசிகக்கண்மணிகள்.

    By Staff
    |

    ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் வேறு கட்சிகளில், சாதி அமைப்புகளில், அரசியல் தொடர்பான பிற அமைப்புகளில்உறுப்பினர்களாக இருந்தால் இன்னும் 2 மாதத்திற்குள் அவற்றிலிருந்து வெளியே வந்து விட வேண்டும் என தனது ரசிகர்களுக்குநடிகர் விஜயகாந்த் கெடு விதித்துள்ளார்.

    மதுரையில் ரசிகர்களுடன் கலந்தாலோசனையில் கலந்து கொண்ட நடிகர் விஜயகாந்த் கோவையில் முகாமிட்டு 7மாவட்டங்களைச் சேர்ந்த மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், இதுவரை எனது ரசிகர்கள் யாருக்குவேண்டுமானாலும் ஓட்டுப் போட்டிருக்கலாம். இனிமேல் அப்படி இருக்க முடியாது.

    மன்ற மாநாடு ஆரம்பிப்பதற்குள், அதாவது இன்னும் 2 மாதத்திற்குள், வேறு கட்சிகளில், ஜாதி அமைப்புகளில் இருக்கும்ரசிகர்கள் அதிலிருந்து வெளியே வந்து விட வேண்டும். மன்றப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

    ரசிகர்களை நம்பி மட்டுமே அரசியலில் இறங்குகிறேன். வேறு யாரையும் நான் நம்பவில்லை. மக்களுக்கு உதவி செய்யவேண்டும், சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்து விட்டுத் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில்லை.


    நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன், எத்தனை தொகுதிகளில் எனது கட்சி போட்டியிடும் என்பது குறித்து இப்போதுஎதுவும் கூற முடியாது. கட்சியின் கொள்கை குறித்து மாநாட்டில் அறிவிக்கப்படும்.

    சட்டசபைத் தேர்தலில் எனது கட்சி தனித்தே போட்டியிடும். யாருடனும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்.

    அரசியலுக்கு வருவதால் நடிப்பை கைவிட மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். இருப்பினும் பதவிக்கு வந்து விட்டால் நடிக்கமாட்டேன். கட்சியில் எனது மனைவிக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்பட மாட்டாது என்றார் விஜயகாந்த்.

    இதற்கிடையே, ரசிகர் மன்றக் கொடியே கட்சிக் கொடியாகவும் இருக்கும் என்று விஜயகாந்த் அறிவித்து விட்டதால் ரசிகர்கள்உற்சாகமடைந்துள்ளனர். மதுரை மாநாடு தொடர்பான சுவர் விளம்பரங்களில், ரசிகர் மன்றக் கொடியை பெரிய அளவில்அவர்கள் வரைந்து வைக்கவில்லை.

    இதற்குக் காரணம், புதிதாக கொடி அறிமுகப்படுத்தப்பட்டால் அதை எங்கே வரைவது என்பது தான். தற்போது மன்றக் கொடியேகட்சிக் கொடி என்று கேப்டன் அறிவித்து விட்டதால் புது உற்சாகத்துடன் கொடியை வரைந்து வருகிறார்கள் அவரது ரசிகக்கண்மணிகள்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X