Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கடவுள் விஜய்சேதுபதிக்கே இப்படியொரு கவலையா.. அதுக்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா நல்லாதான் இருக்கும்!
சென்னை: கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பல லட்ச மக்களின் உயிர்களை பலி வாங்கி வருகிறது. அதற்கு தடுப்பூசி கண்டு பிடிக்க உலகளவில் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
Recommended Video
இந்நிலையில், கொரோனாவை விட கொடிய நோயான பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபுடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும் என நடிகர் விஜய்சேதுபதி பதிவிட்டுள்ள ட்வீட், தமிழக மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் போடப்பட்டுள்ள லாக்டவுனால், பல கோடி மக்கள் வேலையிழக்கும் அபாயமும், உணவு இன்றி வாடும் நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.
திரையுலகை தலைகீழாக புரட்டிய கொரோனா.. லாக்டவுனுக்கு பிறகு மீளுமா.. மெகா பட்ஜெட் படங்களின் நிலை என்ன?
பசிக்கு தடுப்பூசி
மற்ற நடிகர்களை போல இல்லாமல், மக்களின் துயரங்களை அறிந்து, உடனுக்குடன் மக்களுடனே கலந்துரையாடி வருவதால் தான் விஜய்சேதுபதியை மக்கள் செல்வன் என அனைவரும் அழைக்கின்றனர். இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், "பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!!" என பதிவிட்டுள்ளார்.
கமலுடன் உரையாடல்
சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இன்ஸ்டாகிராமில் லைவ்வாக கலந்துரையாடிய நடிகர் விஜய்சேதுபதி, மிகவும் சுவாரஸ்யமான பல கேள்விகளை கமல்ஹாசனிடம் கேட்டு, பல ரகசியங்களை வெளிக் கொண்டு வந்தார். மனம் விட்டு இருவரும் பேசிக் கொண்டதை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசித்தனர். அந்த நிகழ்ச்சியிலும் பசியால் வாடும் ஏழைகள் குறித்து விஜய்சேதுபதி பேசியிருந்தார்.
வாய்ப்பே இல்லை
இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி பதிவிட்ட இந்த ட்வீட் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பலரும், அப்படியொரு மருந்து கண்டுபிடித்தால் உண்மையிலேயே நன்றாகத் தான் இருக்கும் என்றும், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றும் வேற லெவல் கேள்வி தலைவா என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
கடவுளாக வாங்க
ஓ மை கடவுளே என கடைசியில் நடிகர் விஜய்சேதுபதி பதிவிட்டு இருந்ததை பார்த்த இந்த நெட்டிசன், அந்த படத்தில் வருவதை போல, நீங்களே கடவுளாக வந்து பசிக்கான மருந்தை கொடுத்துடுங்க என்றும் கலாய்த்து வருகின்றனர். சரக்கு பிளாக்ல வாங்கி குடிச்சுட்டு பேசுறீங்களா என்றும் சிலர் குசும்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதிக விலை
பசி வராமல் தடுக்கும் தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால், அது அரிசி விலையை விட அதிகமாக இருக்கும் நண்பா பரவாயில்லையா என ஒரு நெட்டிசன் விஜய்சேதுபதியின் கேள்விக்கு மறு கேள்வி கேட்டுள்ளார். ஆனால், இந்த லாக்டவுன் நேரத்தில் மனிதர்கள் பசியால் வாடுவதை மனம் நொந்து விஜய்சேதுபதி இப்படி பதிவிட்டு இருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.