Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் தான் ஹீரோ.. விஜய்சேதுபதி சொன்ன ட்விஸ்ட் ஸ்டோரி.. மாஸ்டர்ல என்ன சர்ப்ரைஸ்லாம் இருகப்போகுதோ?
சென்னை: மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் லேட்டா வந்தாலும், தீயாய் பல விஷயங்களை நடிகர் விஜய்சேதுபதி பேசி அனலை கிளப்பியுள்ளார்.
Recommended Video
விக்ரம் வேதா, பேட்ட படங்களை தொடர்ந்து, மாஸ்டர் படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
விஜய்க்கு வில்லனாக நடிக்க ஏன் சம்மதிச்சீங்கன்னு விஜய் கேட்டப்போ, உங்களை ரொம்ப பிடிக்குமுன்னு சொல்லி ஆஃப் பண்ணியிருக்கிறார்.
நான் தான் ஹீரோ
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய்சேதுபதி, மாஸ்டர் படத்தில் நான் தான் ஹீரோ எனக் கூறி அரங்கத்தையே ஆச்சர்யப்பட வைத்தார். பின்னர், விஜய்க்கு நான் வில்லன்னா.. விஜய் எனக்கு வில்லன் தானே, அப்போ நான் ஹீரோ தானே எனக் கூறி சிரித்தார்.
நல்லா குடிச்சுட்டு
ஒரு நாள் நல்ல குடிச்சுட்டு, எங்கப்பாவ கண்டபடி திட்டுனேன். நான் நல்லா இல்லாத போதெல்லாம் கூட இருந்துட்டு, இப்போ ஏன் கூட இல்லாம போயிட்டியேன்னு, எனக்கு எப்பவுமே எங்கப்பா தான் மாஸ்டர் என்றும் தெறியாக பேசி ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றுள்ளார் மக்கள் செல்வன்.
விஜய் சார் பெருந்தன்மை
ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகுறதுக்கு முன்னாடி, கோபி பிரசன்னா மற்றும் மாஸ்டர் படக் குழுவிடம், என் பேரு பக்கத்துல விஜய்சேதுபதி பெயரும் வரணும்னு சொன்னாரு. இவ்ளோ பெரிய ஸ்டார் படத்துல, நடிக்கிறதே பெரிய விஷயம், இது என் படம் என்கிற கம்ஃபோர்ட் ஸோனை ஏற்படுத்தி கொடுத்தார் விஜய் சார் என்றார்.
ரொம்ப கவனிப்பாரு
நான் ரொம்ப பேசுவேன், ஆனா விஜய் அதிகமா பேசமாட்டாரு, ஏன்னு ஒரு நாள் கேட்டுட்டேன். பேசுறத விட அதிகமா கவனிச்சா, அதிகமா கத்துக்கலாம்னு சொன்னாரு என விஜய்சேதுபதி மனம் விட்டு பல விஷயங்களை மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பேசி அனைவரது மனங்களையும் கொள்ளை அடித்துள்ளார்.