எஸ்வி சேகர் வீட்டின் மீது பாட்டில் வீச்சு சென்னையில் நடிகர் எஸ்.வி. சேகரின் வீட்டில் நள்ளிரவில் பாட்டில்கள் வீசப்பட்டன. இது குறித்து அவர் போலீஸில் புகார்செய்தார்.பிரபல நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகர் அதிமுக தலைமைக் கழக பேச்சாளராக உள்ளார். இவரது வீடு சென்னைமந்தைவெளிப்பாக்கத்தில் உள்ளது. நேற்று இரவு எஸ்.வி. சேகர் தனது குடும்பத்தினருடன் படம் பார்க்கச் சென்றிருந்தார்.வீட்டில் அவரது மகன் அஸ்வின் மட்டும் இருந்தார். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் திடீரென எஸ்.வி. சேகரின் வீட்டின்மீது சரமாரியாக பாட்டில்கள் வீசப்பட்டன.இதையடுத்து அஸ்வின் தனது தந்தைக்கு போன் செய்து விவரத்தை தெரிவித்தார். உடனடியாக தியேட்டரில் இருந்து எஸ்.வி.சேகர் விரைந்து வந்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
சென்னையில் நடிகர் எஸ்.வி. சேகரின் வீட்டில் நள்ளிரவில் பாட்டில்கள் வீசப்பட்டன. இது குறித்து அவர் போலீஸில் புகார்செய்தார்.
பிரபல நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகர் அதிமுக தலைமைக் கழக பேச்சாளராக உள்ளார். இவரது வீடு சென்னைமந்தைவெளிப்பாக்கத்தில் உள்ளது. நேற்று இரவு எஸ்.வி. சேகர் தனது குடும்பத்தினருடன் படம் பார்க்கச் சென்றிருந்தார்.
வீட்டில் அவரது மகன் அஸ்வின் மட்டும் இருந்தார். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் திடீரென எஸ்.வி. சேகரின் வீட்டின்மீது சரமாரியாக பாட்டில்கள் வீசப்பட்டன.
இதையடுத்து அஸ்வின் தனது தந்தைக்கு போன் செய்து விவரத்தை தெரிவித்தார். உடனடியாக தியேட்டரில் இருந்து எஸ்.வி.சேகர் விரைந்து வந்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
Comments


Click it and Unblock the Notifications