Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காலைல 7.30க்கு குதிரையில ஏறி மாலை 5.30 மணி வரைக்கும் டயலாக் பேசினாரு.. விக்ரம் டெடிகேஷனை பாருங்க!
சென்னை : நடிகர் விக்ரம் நடிப்பில் பொன்னியில் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளது.
Recommended Video
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் தற்போது முடிவடைந்த நிலையில், இந்தப் படத்தின் ரிலீசுக்கு பின்பு இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் தற்போது விக்ரமின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
வலிமை, பீஸ்ட் பிளாப்.. லிஸ்ட் போட்டு சொன்ன ப்ளூ சட்டை மாறன்..அடுத்த பஞ்சாயத்து!
நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்துவரும் விக்ரம் படங்களுக்காக ரசிகர்கள் தொடர்ந்து வெயிட் செய்துவரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 11ல் அவரது கோப்ரா படம் ரிலீசாக உள்ளது.
கோப்ரா இசை வெளியீடு
இந்தப் படத்தில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகியவாறு உள்ளது. வரும் திங்கட்கிழமை படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விக்ரம் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விக்ரம் பங்கேற்பு
இந்நிலையில் இன்னும் இரு தினங்களில் நடைபெறவுள்ள கோப்ரா இசை வெளியீட்டில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அவர் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளன. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.
பொன்னியின் செல்வன் படம்
அடுத்ததாக விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கேரக்டரில் விக்ரம் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. தமிழில் இதை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
சிறப்பான விமர்சனம்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டீசர் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
சிறப்பான விக்ரம்
இதனிடையே இந்தப் படத்திற்காகவும் வழக்கம் போல விக்ரம் அதிகமான மெனக்கெடல்களை செய்துள்ளது குறித்து படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது. படத்தின் சூட்டிங்கின்போது அவர் ஒருநாள் காலை 7.30 மணிக்கு குதிரை மீது ஏறி தொடர்ந்து டயலாக் பேசியுள்ளார். அவர் குதிரையை விட்டு இறங்கும்போது மாலை 5.30 ஆகிவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.
டீசர் வெளியீட்டில் பங்கேற்க முடியாத விக்ரம்
அந்த அளவிற்கு டெடிகேட்டானவர் விக்ரம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்த கேரக்டரை சிறப்பாக்கும் வகையில் விக்ரம் நடித்த நிலையில், இன்றைய தினம் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது.