Don't Miss!
- News கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஷங்கர் படத்துக்குப் பிறகு கோலி சோடா இயக்குநருடன் இணையும் விக்ரம்!
ஷங்கர் இயக்கும் ஐ படத்துக்குப் பிறகு, கோலி சோடா புகழ் விஜய் மில்டன் படத்தில் நடிக்கிறார் நடிகர் விக்ரம்.
ஏஆர் முருகதாசும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இடம் மாறி இறங்கியவன் எனத் தலைப்பிட்டுள்ளனர்.
ஏக டிமாண்ட்
இந்த ஆண்டு சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய லாபம் பார்த்த ஒரே படம் கோலி சோடா. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வேறு மேடைக்கு மேடை இதைச் சொல்லி வருகிறார்கள். எனவே படத்தை இயக்கிய விஜய் மில்டனுக்கு பாராட்டுகளும் வாய்ப்புகளும் தொடர்கின்றன.
விக்ரம்
இப்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ஐ படப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் மில்டனுக்கு கால்ஷீட் தந்துள்ளார் விக்ரம்.
இடம் மாறி இறங்கியன்
இந்தப் படத்துக்கு இடம் மாறி இறங்கியவன் என்ற தலைப்பை தற்காலிகமாக சூட்டியுள்ளனர். படத்தின் அவுட்லைன் மிகவும் பிடித்துப் போனதால் முழு ஸ்க்ரிப்டையும் தயார் செய்யச் சொல்லியிருக்கிறாராம்.
அடுத்தடுத்து..
இந்தப் படத்தை சீக்கிரம் முடித்துவிட்டு, மேலும் இரு படங்களில் நடிக்கவிருக்கிறாராம் விக்ரம்.