Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல்... விக்ரமன் தலைவராகத் தேர்வு
சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் இயக்குநர் விக்ரமன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த தேர்தல் சென்னை கே.கே.நகரில் உள்ள சமூக நலக்கூடத்தில் நேற்று நடந்தது. ஓட்டுப்பதிவு காலையில் தொடங்கி மாலையில் முடிவடைந்தது. பின்னர் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.
மொத்தம் 292 ஓட்டுக்கள் பதிவாகின. இதில், சங்கத்தின் தலைவராக இயக்குநர் விக்ரமன் 205 ஓட்டுக்கள் வாங்கி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மோகன் காந்திராமன் 87 ஓட்டுக்கள் பெற்றார்.
செயலாளராக கவிஞர் பிறைசூடன் 150 ஓட்டுக்கள் வாங்கி வெற்றி பெற்றார். துணை தலைவர் பதவிக்கு பஞ்சு அருணாச்சலம், யார் கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிலை செயலாளர்களாக பா.விஜய், சண்முகசுந்தரம், ரங்கநாதன், பிரபாகரன் ஆகியோர் தேர்வானார்கள்.
பொருளாளர் பதவிக்கு ரமேஷ்கண்ணா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.