Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
போராடி கிடைத்த வெற்றி..பிக் பாஸ் வீட்டில் ஒலித்த “ஜெய்பீம்“..போராட்டம் எங்களுக்கு புதுசுஇல்லை!
சென்னை : விஜய் தொலைக்காட்சியில் விக்ரமன், அம்பேத்கருக்கு கடிதம் எழுதி படித்தது ஓளிபரப்பப்படாதது சர்ச்சைக்குள்ளான நிலையில், நேற்று ஒரு மணி நேர எபிசோடில் விஜய் டிவி அதை ஒளிபரப்பி உள்ளது.
கடந்த ஆக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது வீட்டில் 10 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
இது வரை எந்த சீசனில் இல்லாத வகையில் இந்த சீசனில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் விக்ரமன் பங்கேற்று வருகிறார்.
அம்பேத்கருக்கு கடிதம் எழுதிய விக்ரமன்..புறக்கணித்த விஜய் டிவி..விளாசும் நெட்டிசன்ஸ்!
பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் வீட்டில் கனா காணும் காலங்கள் டாஸ்க் நடைபெற்று வருகிறதற்காக போட்டியாளர்கள் இரண்டு டீமாக பிரிந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக இருந்தனர். இதில், அசீம், தனலட்சுமிக்கு லவ் லெட்டர் கொடுத்ததும், அவரை துரத்தி துரத்தி வம்பு இழுத்ததும் ரசிக்கும்படி இருந்தது. இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளராக அசீம் இருப்பார் என்று ரசிகர்கள் இப்போதே யூகித்து வைத்துவிட்டனர். இதையடுத்து, நேற்றில் இருந்து 80ஸ் கல்லூரியாக பிக் பாஸ் வீடு மாறி உள்ளது.
அம்பேத்கருக்கு கடிதம்
பிக் பாஸ் வீட்டில் கடித டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரை நினைத்து கண்ணீர் மல்க பேசினார்கள். ஆனால், விக்ரமன் சட்டமேதை அம்பேத்கரை நினைத்து உருக்கமான கடிதம் எழுதி இருந்தார். அனைத்து போட்டியாளர்கள் கடிதம் வாசித்தது 24 மணி நேரலையிலும், விஜய் டிவியிலும் ஒளிபரப்பான நிலையில், விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதி படித்தது 24 மணி நேர ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகவில்லை.
விக்ரமனுக்கு மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன்?
இதனால் சோஷியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பியது. அனைவருக்கும் வழங்கப்பட்ட வாய்ப்பு விக்ரமனுக்கு மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன்? என கேள்வியை நெட்டிசன்கள் இணையத்தில் கேட்டனர். இணையத்தில் கண்டனங்கள் வலுத்ததால், நேற்று விஜய் டிவியில் விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதி வாசித்ததை ஒளிபரப்பியது.
ஜெய் பீம்
இதனால் , மகிழ்ச்சி அடைந்த ஒரு நெட்டிசன்ஸ், இறுதியாக வெற்றி பெற்று விட்டோம், அம்பேத்கர் பற்றி விக்ரமன் எழுதிய அன்பு கடிதம் 1மணி நேரம் நிகழ்வில் காட்டப்பட்டது உள்ளது 24 மணி நேர நிகழ்வில் தவிர்க்க நினைத்ததை 1 மணி நேரத்தில் வரவைத்து ஜனநாயகத்தின் வெற்றி என்றும், எதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கு என்றும், போராட்டம் நமக்கு புதுசில்லையே ஜெய் பீம் என்றும் பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.