Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்து வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
விஜய் பெரிய 'மாஸ் ஹீரோ' ஆவார்னு நான் அப்பவே சொன்னேன், யாருமே நம்பல: விக்ரமன்
சென்னை: விஜய் மாஸ் ஹீரோவாக ஆவார் என்று நான் கூறியபோது யாருமே என்னை நம்பவில்லை என்று இயக்குனர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.
குடும்ப படங்கள் எடுக்க பெயர் போனவர் இயக்குனர் விக்ரமன். அவர் இயக்கியுள்ள நினைத்தது யாரோ படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் புதுமுகங்களான ரெஜித் மற்றும் நிமிஷா ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.
இந்நிலையில் படம் குறித்து விக்ரமன் கூறுகையில்,
விஜய், ஜோ
நினைத்தது யாரோ ரெஜித் மற்றும் நிமிஷா விஜய், ஜோதிகா போன்று விரைவில் பிரபலம் ஆவார்கள் என்று விக்ரமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாஸ் ஹீரோ
நான் விஜய்யை வைத்து பூவே உனக்காக படம் பண்ணியபோது அவர் ஒரு பெரிய மாஸ் ஹீரோவாக வருவார் என்றேு கூறினேன். ஆனால் அப்போது யாருமே என்னை நம்பவில்லை. நான் கூறியது நடந்தது என்றார் விக்ரமன்.
ரெஜித்
நான் நினைத்தது யாரோ படத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ள புதுமுகங்கள் அருமையாக நடித்துள்ளனர். ரெஜித் ஒருநாள் விஜய் போன்று பெரிய ஸ்டாராக வருவார். நிமிஷா ஜோதிகா போன்று பிரபலமாவார். அவருக்கு நல்ல தமிழில் பேசவும் தெரியும் என்று விக்ரமன் தெரிவித்தார்.
பூவே உனக்காக
விஜய்க்கு பல ரசிகைகள் கிடைக்க காரணமாக இருந்த படம் பூவே உனக்காக. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்த படம் இது என்று கூட கூறலாம்.