Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய் பெரிய 'மாஸ் ஹீரோ' ஆவார்னு நான் அப்பவே சொன்னேன், யாருமே நம்பல: விக்ரமன்
சென்னை: விஜய் மாஸ் ஹீரோவாக ஆவார் என்று நான் கூறியபோது யாருமே என்னை நம்பவில்லை என்று இயக்குனர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.
குடும்ப படங்கள் எடுக்க பெயர் போனவர் இயக்குனர் விக்ரமன். அவர் இயக்கியுள்ள நினைத்தது யாரோ படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் புதுமுகங்களான ரெஜித் மற்றும் நிமிஷா ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.
இந்நிலையில் படம் குறித்து விக்ரமன் கூறுகையில்,
விஜய், ஜோ
நினைத்தது யாரோ ரெஜித் மற்றும் நிமிஷா விஜய், ஜோதிகா போன்று விரைவில் பிரபலம் ஆவார்கள் என்று விக்ரமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாஸ் ஹீரோ
நான் விஜய்யை வைத்து பூவே உனக்காக படம் பண்ணியபோது அவர் ஒரு பெரிய மாஸ் ஹீரோவாக வருவார் என்றேு கூறினேன். ஆனால் அப்போது யாருமே என்னை நம்பவில்லை. நான் கூறியது நடந்தது என்றார் விக்ரமன்.
ரெஜித்
நான் நினைத்தது யாரோ படத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ள புதுமுகங்கள் அருமையாக நடித்துள்ளனர். ரெஜித் ஒருநாள் விஜய் போன்று பெரிய ஸ்டாராக வருவார். நிமிஷா ஜோதிகா போன்று பிரபலமாவார். அவருக்கு நல்ல தமிழில் பேசவும் தெரியும் என்று விக்ரமன் தெரிவித்தார்.
பூவே உனக்காக
விஜய்க்கு பல ரசிகைகள் கிடைக்க காரணமாக இருந்த படம் பூவே உனக்காக. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்த படம் இது என்று கூட கூறலாம்.