Don't Miss!
- News 7 மணிக்கு வாக்குப்பதிவு 72%.. நள்ளிரவில் அப்டேட் 69%.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலால் குழப்பம்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இயக்குநர் சங்கத் தேர்தல்: போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட விக்ரமன்
தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இயக்குநர் விக்ரமன்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.
2015-17-ம் ஆண்டுக்கான தேர்தல் ஜூலை 5-ந் தேதி நடைபெற உள்ளது. அதில் ஏற்கனவே தலைவராக இருந்த விக்ரமன், துணைத் தலைவர்களாக இருந்த பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், செயலாளராக இருந்த ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக இருந்த வி.சேகர் ஆகியோர் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.
இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் விக்ரமன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியாக இருந்த வக்கீல் செந்தில்நாதன் நேற்று அறிவித்தார்.
இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டும் ஜூலை 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.