Don't Miss!
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இயக்குநர் சங்கத் தேர்தல்: போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட விக்ரமன்
தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இயக்குநர் விக்ரமன்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.
2015-17-ம் ஆண்டுக்கான தேர்தல் ஜூலை 5-ந் தேதி நடைபெற உள்ளது. அதில் ஏற்கனவே தலைவராக இருந்த விக்ரமன், துணைத் தலைவர்களாக இருந்த பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், செயலாளராக இருந்த ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக இருந்த வி.சேகர் ஆகியோர் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.
இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் விக்ரமன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியாக இருந்த வக்கீல் செந்தில்நாதன் நேற்று அறிவித்தார்.
இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டும் ஜூலை 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.