Don't Miss!
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மன்னர் வகையறா... விமல் தேறுவாரா.. மீண்டும் துணை நடிகராவாரா?
களவாணிக்குப் பிறகு விமல் தனி நாயகனாக நடித்த எந்தப் படமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
சமீபத்தில் வந்த மாப்ள சிங்கமும் வாரிவிட, இனி கிராமத்துப் படங்களில் நடிக்க மாட்டேன் என தயாரிப்பாளர்களைத் திருப்பி அனுப்பினார்.
அதன் பிறகு இவரை வைத்துப் படமெடுக்க யாருமே ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எனவே சமீபத்திய சினிமாக்காரர்களின் வழக்கப்படி, தானே சொந்தமாகத் தயாரித்து ஒரு படம் நடித்தார். இயக்கம் பூபதி பாண்டியன். படத்துக்குப் பெயர் மன்னர் வகையறா.
சொந்தப் படம் எடுத்த பிறகுதான் தயாரிப்பாளர்களின் கஷ்டம் என்னவென்று விமலுக்குப் புரிந்திருக்கிறது. ஒரு கோடி வரை செலவான பிறகு, போதுன்டா சாமி தயாரிப்பு என வெளியில் வந்துவிட்டாராம். விஷயம் கேள்விப்பட்டு, வேறு ஒருவர் இப்போது படத்தை தன் கையில் எடுத்துக் கொண்டாராம்.
விமல், கயல் ஆனந்தி, பிரபு, நாசர், சரண்யா பொன்வண்ணன, ரோபேர சங்கர், யோகி பாபு நடிக்கின்றனர். அதே பூபதி பாண்டியன் இயக்குகிறார்.
தேறுவாரா விமல் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.