Don't Miss!
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- News சரியான "அடி" தந்த வேங்கைவயல் மக்கள்.. யாருமே ஓட்டுப்போடல..விழுந்தடித்து ஓடிய ஆபீசர்ஸ்.. இப்ப பாருங்க
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
விமல்- சூரி நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா!
'ஜெயம்கொண்டான்', 'கண்டேன் காதலை', 'சேட்டை' ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். குளோபல் இன்போடெயின்ட்மெண்ட் நிறுவனம் மூலம் மைக்கேல் ராயப்பன் (விஜயகாந்த் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ!) படத்தை தயாரிக்கிறார்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வரும் இரயிலில் நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் கண்ணன்.
முதல் பாதி வரை இரயிலிலும், இரண்டாம் பாதி கார் பயணம் என ஆக்ஷன், காமெடி கலந்த பொழுதுபோக்குப் படமாக உருவாகிறது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் தொடங்கியது. இந்த தொடக்க விழாவில், இயக்குனர் கண்ணன், நடிகர் சூரி, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தை வரும் ஜூலையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
விமல் - சூரி ஏற்கெனவே இணைந்த களவாணி, தேசிங்கு ராஜா படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.