விந்தியா விவாகரத்து வழக்கு செம்டம்பருக்கு தள்ளி வைப்பு!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை பானுபிரியாவின் தம்பி கோபி என்கிற கோபால கிருஷ்ணனை நடிகை விந்தியா திருமணம் செய்தார்.
திருமணமாகி சில மாதங்களில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி மனுதாக்கல் செய்தனர். பல மாதங்கள் அந்த வழக்கு நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில் பரஸ்பரம் 2 பேரும் பிரிந்து செல்ல முடிவு செய்து, அதற்கான புதிய மனுவை சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இணைந்து தாக்கல் செய்தனர். ஒருவரை ஒருவர் சுமுகமாக பிரிந்து செல்ல இருப்பதால், தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று அதில் கோரியுள்ளனர்.
இந்த மனுவை சென்னை குடும்பநல முதன்மை நீதிமன்ற நீதிபதி ராஜா சொக்கலிங்கம் விசாரித்தார். பரஸ்பரம் பிரிந்து செல்லக்கோரும் வழக்கு என்பதால், விசாரணையை வரும் 6 மாதங்கள் கழித்து செப்டம்பர் 26-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











