என் கையாலேயே சாப்பிட்டுவிட்டு, என் மீதே கொலைப்பழி போடுகிறார்களே: அல்போன்சா

கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் காதலர் வினோத் குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அல்போன்சாவும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இதற்கிடையே அல்போன்சா தனது பெற்றோருடன் சேர்ந்து வினோத் குமாரை கொலை செய்ததாக அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து அல்போன்சா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வினோத்குமார் ஒரு தோழி மூலமாக எனக்கு அறிமுகமானார். அடிக்கடி வீட்டுக்கு வந்து போனார். செல்போன் எண்ணை வாங்கி பேசினார். என்னை உயிருக்கு உயிராய் காதலித்தார். அவர் தான் முதலில் காதலை சொன்னார். நான் ஏற்கனவே திருமணமானவள் என்று சொன்னேன். அதற்கு அவர் நீ வாழாவெட்டியாக இருப்பது எனக்கு தெரியும். நான் உன்னை மணந்து கொள்கிறேன் என்றார்.
எனது தங்கைக்கு திருமணம் முடிந்ததும் உன்னை மணக்கிறேன் என்றார். ஒரு கட்டத்தில் அவர் என் வீட்டிலேயே தங்கிவி்ட்டார். அதன் பின்னர் அவரது தாயும், தந்தையும் ஒரு நாள் என் வீட்டுக்கு வந்தனர். இது தான் உங்கள் மருமகள் என்று என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். நான் அவர்களுக்கு எனது கையால் சமைத்து போட்டேன்.
வினோத் குமாரின் தம்பியும் என் வீட்டில் தங்கியுள்ளார்.
நான் துபாய் கலை விழாவுக்கு சென்றிருந்தபோது வினோத் குமார் தான் என் மகளை பார்த்துக் கொண்டார். தினமும் அவளை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். நான் திரும்பி வந்ததும் சந்தோஷமாகத் தான் இருந்தோம். அப்போது அவர் வீ்ட்டில் இருந்து போன் வந்தது. எடுத்துப் பேசிய அவர் டென்ஷன் ஆனார். பாத்ரூம் போவதாக சொல்லிவிட்டு சென்றவரை நீண்ட நேரமாகக் காணவில்லை என்று தேடிப் போனேன். ஆனால் அவர் பாத்ரூமிலேயே இல்லை.
எனது மகளின் படுக்கையறையில் தூக்கில் தொங்கினார். அதைப் பார்த்து அலறினேன். உடனே கத்தியை எடுத்து வந்து கயிற்றை அறுத்து அவரது உடலை கீழே இறக்கினேன். ஆனால் அவரது பெற்றோரோ பாவி என் மகனை கொன்றுவிட்டாயே என்று என்னை திட்டியதால் விரக்தியில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.
முதல் கணவரை விவகாரத்து செய்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நான் வினோத் குமாரிடம் சொல்லியி்ருந்தேன். நான் துபாய் சென்றபோது எனது முதல் கணவரை சந்தித்தாக வந்த தகவல்கள் பொய்யானது. நான் அவரை சந்திக்கவுமில்லை, சந்திக்கவும் மாட்டேன்.
வினோத் குமார் பெற்றோர் என் கையால் சாப்பிட்டுவிட்டு என் மீதே கொலைப் பழி சும்ததுவதி வேதனையாக உள்ளது. நான் எந்த தவறும் செய்யாதவள் என்றார்.


Click it and Unblock the Notifications











