Don't Miss!
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தனுஷ் - வெற்றி மாறனின் "விசாரணை".. பிப்ரவரிக்குத் தள்ளி வைப்பு!
சென்னை: ஜனவரி 29 ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் தற்போது பிப்ரவரி 5 ம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது.
நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும் இணைந்து தயரித்திருக்கும் படம் விசாரணை. பிரபல எழுத்தாளர் எம்.சந்திரசேகரின் லாக் - அப் நாவலை அடிப்படையாக வைத்து விசாரணை உருவாகி இருக்கிறது.
அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசைமயமைத்து இருக்கிறார்.
72 ஆண்டு கால வெனீஸ் திரைப்பட வரலாற்றில் திரையிடும் பிரிவில் கலந்து கொண்ட முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை விசாரணை பெற்றது.
மேலும் மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் விருதுக்கான படமாகவும் விசாரணை அறிவிக்கப்பட்டது. வெளியாகும் முன்பே பல்வேறு விருதுகளையும் விசாரணை வென்றிருப்பதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் ஜனவரி 29 ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட விசாரணை தற்போது பிப்ரவரி 5 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தினத்தில் கதகளி, தாரை தப்பட்டை, ரஜினிமுருகன் மற்றும் கெத்து என்று 4 திரைப்படங்கள் வெளியாகின்றன. இதனால் 2 வாரம் கழித்து உங்கள் படத்தை வெளியிடுங்கள் என்று தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்கள் கூறியதை விசாரணை குழுவினர் ஏற்றுக் கொண்டனராம்.
இதனால் தான் பிப்ரவரி 5 ம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது விசாரணை.