twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. விஷால் அறிவிப்பு!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : தமிழக அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையால், உடன்பாடு எட்டப்பட்டு தமிழ் திரையுலகினரின் ஸ்ட்ரைக் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

    இந்நிலையில், நேற்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், இந்த வெள்ளிக்கிழமை முதல் படங்கள் ரிலீஸ் ஆகத் தொடங்கும் என அறிவித்தார்.

    வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 20) முதல் ஷூட்டிங், டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட சினிமாத்துறையின் பிற பணிகளும் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் விஷால்.

    வெள்ளிக்கிழமை முதல்

    வெள்ளிக்கிழமை முதல்

    திரையுலகினர் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்றதையடுத்து எப்போது புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் எனும் கேள்வி எழுந்தது. நேற்று இதுதொடர்பாகப் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் இந்த வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.

    மெர்க்குரி

    மெர்க்குரி

    ஸ்ட்ரைக்கு பிறகான ரிலீஸில் முதல் படமாக கார்த்திக் சுப்புராஜின் 'மெர்க்குரி' படம் ரிலீஸாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் 13-ம் தேதி அன்றே இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பிறகு முடிவு மாற்றிக்கொள்ளப்பட்டு தமிழகம் தவிர மற்ற இடங்களில் மட்டும் வெளியானது.

    ஜூன் 1 முதல்

    ஜூன் 1 முதல்

    வரும் ஜூன் 1 முதல் தமிழ் சினிமா டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். நடிகர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பான விஷயங்களைப் பேச வரும் சனிக்கிழமை நடிகர் சங்க கூட்டம் நடைபெறவுள்ளது.

    அடுத்த மார்ச் வரை

    அடுத்த மார்ச் வரை

    அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. படங்களின் ரிலீஸை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அனைத்து திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    பறக்கும் படை

    பறக்கும் படை

    டிக்கெட் கட்டணம் ரூ. 150-க்கும் மேல் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். டிக்கெட்டுகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பறக்கும் படை அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் விஷால்.

    English summary
    The negotiations on behalf of the TN government have reached the end of the Tamil film industry's strike. In this case, the producer council president Vishal announced that the films will start releasing from this Friday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X