Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பார்ரா.. "ஆன்த்தம்" வெளியிடும் விஷால்.. ஒரு வேளை அரசியலுக்கு வந்துருவாரோ??
சென்னை : நடிகர் விஷாலின் 40-வது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. 'செல்லமே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான விஷால் இதுவரை 30 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.
விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'Vishal Anthem' எனும் பெயரில் 'தலைவன் வருகின்றான்...' பாடல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை நடிகரும் விஷாலின் நண்பருமான ஆர்யா வெளியிட்டார்.
'கொலையுதிர்காலம்' ஆவணப்படத்தை இயக்கிய ராஜீவ்காந்தி இந்தப் பாடலை இயக்கியிருக்கிறார். இந்தப் பாடலை எழுதியவர் முருகன் மந்திரம். இஷான் தேவ் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். நிக்கில் மேத்யூ, இஷான் தேவ் இருவரும் பாடலைப் பாடி இருக்கிறார்கள்.
Happy birthday my love 😍😍😘😘Vishal anthem 'THALAIVAN IRUKKINDRAAN @KARAJIVGANDHI @ishaandev @muruganmantiram https://t.co/T9TuR9JYaZ have fun pic.twitter.com/SMFq3XtaY6
— Arya (@arya_offl) August 28, 2017
நடிகர் சங்கத்தின் செயலாளராக இருக்கும் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். சினிமாவின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விஷால் திருட்டு வி.சி.டி, பைரசிக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சமூகப் பணிகள், சினிமா கலைஞர்களுக்கு உதவி செய்வது ஆகிய காட்சிகள் படமாக்கப்பட்டு இந்த விஷால் கீதம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலின் வரிகள், விஷாலின் அரசியல் பிரவேசத்திற்கான முன்னோட்டமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.