Don't Miss!
- News ஆட்டத்தை கலைத்த பாஜக.. பெரிய கூட்டணி இல்லாமல் களம் இறங்கும் அதிமுக.. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது?
- Finance 20000 ரூபாய்க்கு கீழ் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் ஷாப்பிங்
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
ஜெயலலிதா படித்த பள்ளியில் விஷால்!
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் பள்ளியின் ஆண்டுவிழாவில் நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசுகையில், "ஆண்டு தோறும் பள்ளிகளில் கலை விழாக்கள் நடப்பது வழக்கம். இந்த கலைவிழாக்கள் எல்லா பள்ளிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருவது மகிழ்ச்சியான ஒன்றாகும். வெறும் புத்தக கல்வி மட்டும் நமக்கு நல்ல பலனை கொடுக்காது. இதை போன்ற விஷயங்களில் பங்கேற்கும் போது உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவம் உங்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
நான் பள்ளியில் படிக்கும் போது பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். அதை போல் நீங்கள் அனைவரும் உங்களுக்கும் கிடைக்கும் ஒரு மேடையை கூட தவறவிடாமல் அனைத்து மேடையிலும் பங்கேற்க வேண்டும்.
அப்படி நான் அனைத்து மேடையிலும் பங்கேற்றதுதான் எனக்கு இன்று மிகப்பெரிய உந்துதலாக அமைந்தது. உங்கள் அனைவருக்கும் மிகசிறந்த ஆசிரியர்கள் கிடைத்துள்ளார்கள். அவர்கள் கண்டிப்பாக உங்கள் இந்த நாட்டின் சிறந்த குடிமகனாக உருவாக்குவார்கள். வெளியே இருக்கும் நாங்கள் தங்களை போன்ற மாணவர்கள் இந்த சமூகத்துக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று காத்திருக்கிறோம்.
இந்த பள்ளியில் மிகப்பெரிய சாதனையாளர்கள், ஜாம்பவான்கள் படித்துள்ளார்கள். அவர்களில் ஒருவர் மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதா மற்றொருவர் என்னுடைய நெருங்கிய நண்பர் த்ரிஷா. உங்களுடைய எதிர்காலம் நன்றாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள். எதை செய்தாலும் உங்கள் நெஞ்சிலிருந்து துணிவாக செய்யுங்கள்," என்றார் விஷால்.