Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஷால் நினைத்திருந்தால் என் மகனை காப்பாற்றி இருக்கலாம்: கார் டிரைவர் தந்தை கண்ணீர்
விஷாலின் கார் ஓட்டுனர் மரணமடைந்தார்
சென்னை: நடிகர் விஷாலின் கார் ஓட்டுனர் உடல்நலக்குறைவால் காலமானார்.
சமீபத்தில் விஷால் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி, அதற்கான கொடியையும் வெளியிட்டார்.
தற்போது நடிகர் விஷாலின் கார் ஓட்டுனராக இருந்த பாண்டியராஜன் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். பாண்டியராஜன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு வராமல் சிகிச்சை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் உயர் சிகிச்சைக்கு போதிய பண வசதி இல்லமல் அவதிப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாண்டியராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பேசிய பாண்டியராஜனின் தந்தை, நடிகர் விஷால் நினைத்திருந்தால் என் மகனை காப்பாற்றியிருக்கலாம். அவரிடமிருந்து உரிய நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் பாண்டியராஜன் உயிருடன் இருந்திருப்பார் என தெரிவித்துள்ளார்.