விஷால் நினைத்திருந்தால் என் மகனை காப்பாற்றி இருக்கலாம்: கார் டிரைவர் தந்தை கண்ணீர்
விஷாலின் கார் ஓட்டுனர் மரணமடைந்தார்
சென்னை: நடிகர் விஷாலின் கார் ஓட்டுனர் உடல்நலக்குறைவால் காலமானார்.

சமீபத்தில் விஷால் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி, அதற்கான கொடியையும் வெளியிட்டார்.

தற்போது நடிகர் விஷாலின் கார் ஓட்டுனராக இருந்த பாண்டியராஜன் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். பாண்டியராஜன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு வராமல் சிகிச்சை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் உயர் சிகிச்சைக்கு போதிய பண வசதி இல்லமல் அவதிப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாண்டியராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பேசிய பாண்டியராஜனின் தந்தை, நடிகர் விஷால் நினைத்திருந்தால் என் மகனை காப்பாற்றியிருக்கலாம். அவரிடமிருந்து உரிய நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் பாண்டியராஜன் உயிருடன் இருந்திருப்பார் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











