ஆர்கே நகரில் விஷால்... ஆழம் பார்க்கும் கமல்ஹாசன்?
Recommended Video

சென்னை: ஆர்.கே. நகரில் விஷாலை நிறுத்தி அரசியலில் ஆழம் பார்க்க கமல் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதலில் ட்விட்டரிலும் இப்போது களத்திலும் அரசியலில் இறங்குவதற்கான ஆழ்ம் பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன். நேற்று வெளியிட்ட ட்விட்டில் விரைவில் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்கவிருப்பதாக சொல்லியுள்ளார்.

இந்நிலையில் ஆர்கே நகர் இடைதேர்தலில் விஷாலை களம் இறக்க கமல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வருகிறது. விஷாலின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் ஒரு சர்வே எடுத்து வருகிறார்கள். அந்த சர்வே ஆர்கே நகர் இடைதேர்தலை குறி வைத்து எடுத்து வருகிறார்களாம்.
வியூகம் அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவதில் விஷால் வல்லவர். எனவே முதல் முயற்சியிலேயே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கமல் விஷாலை களம் இறக்க முயற்சிக்கிறார் என்கிறார்கள்.
விஷாலை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் தரப்பும் முயற்சித்து வருகிறதாம்.
இது அரசியலுக்கு தகுந்த நேரம் இல்லை என்று விஷாலுக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் சொல்லி வருகின்றனர்.
கமலை நம்பி ரிஸ்க் எடுப்பாரா விஷால்?


Click it and Unblock the Notifications











