Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தியேட்டர்காரர்களுக்கு விஷால் போட்ட கிடுக்கிப்பிடி... ஸ்ட்ரைக் தொடர்கிறது!
சென்னை: திரைப்படத் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாக இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் விஷால்.
க்யூப் உள்ளிட்ட டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்களின் அதிகபட்ச கட்டணத்துக்கு எதிராகத்தான் முதலில் சினிமா ஸ்ட்ரைக் ஆரம்பித்தது. ஆனால் உண்மையில் இந்த வேலை நிறுத்தம் திரையரங்குகளின் அட்ராசிட்டியை கட்டுக்குள் கொண்டுவரத்தான் என்பது தெளிவாகப் புரிந்துவிட்டது.
திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம், பார்க்கிங், தின்பண்டங்களின் விலைகள் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை இல்லை என்ற சாமான்ய மக்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டை இந்த முறை களைந்தே தீர வேண்டும் என்பதில் விஷால் உறுதியாக உள்ளார். மேலும் திரையரங்குகள் வசூலாகும் தொகை பற்றிய விவரங்களை தயாரிப்பாளர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் கணிணிமமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எந்தத் தியேட்டர் உரிமையாளரும் ஏற்க மறுக்கிறார்.
அதாவது கள்ளக்கணக்கு காட்ட வசதியாக, தியேட்டர்களை அவர்கள் இஷ்டத்துக்கு செயல்பட விட வேண்டும் என்பது இவர்கள் வாதம். மக்கள் தியேட்டர்கள் மீதுதான் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஆனால் தியேட்டர்காரர்களின் பேராசை, திருட்டுக்கணக்கு காரணமாக தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களும் படம் பார்க்கப் போகத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாதாரண மக்கள் தொடர்ந்து தியேட்டர்களுக்கு வரவேண்டும். தியேட்டர்களில் அனைத்து விலைகளும் கட்டுக்குள் இருக்க வேண்டும். முன்பு இருந்தது போல ஏழை மக்களுக்கு வசதியாக குறைந்த விலை டிக்கெட்டுகள் விற்கப்பட வேண்டும் என்று விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தக் கோரிக்கையை அவர் தமிழக அரசிடமும் வலியுறுத்தப் போவதாக இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
விஷாலின் இந்தக் கோரிக்கைகளுக்கு திரைப்பட நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளம் என அனைத்துத் தரப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் மட்டும் இப்போது பிடிவாதமாக முரண்டு பிடிக்கின்றனர்.