மாதச் சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களால் நியூஸ் சேனல் எப்படி துவங்க முடியும்?: விஷால்
Recommended Video

சென்னை: மேலும் ஒரு செய்தி சேனல் துவங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் விஷால்.
தமிழகத்தில் புதிய செய்தி சேனல் ஒன்று துவங்கப்படுகிறது. இது குறித்து அறிந்த நடிகர் விஷால் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியுள்ள அவர் அரசியல்வாதிகளை தான் கேட்கிறார்.
ட்விட்டரில் விஷால் கூறியிருப்பதாவது,

விஷால்
மேலும் ஒரு புதிய செய்தி சேனல் வருகிறது. வாவ். ஒரு செய்தி சேனலை துவங்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டேன். மாத சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களாகிய உங்களுக்கு எப்படி இது போன்ற தொழில் செய்ய முடிகிறது. 2019ம் ஆண்டுக்காக காத்திருக்கிறேன் என்று விஷால் ட்வீட்டியுள்ளார்.

அமைதி
யார் செய்தி சேனலை துவங்குறார், அதன் பெயர் என்ன, எவ்வளவு செல்வு செய்துள்ளார்கள் என்று விபரம் தெரிந்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தான் விஷால் துணிந்து கேள்வி கேட்டுள்ளார்.
நெட்டிசன்கள்
விஷாலின் ட்வீட்டை பார்த்து ஒரு சிலர் பாராட்டினாலும் பலரும் அவரிடம் பதிலுக்கு கேள்வி கேட்டுள்ளனர்.
டிவி நிகழ்ச்சி
இது ஒரு நல்ல கேள்வி
தமிழ் ராக்கர்ஸ்
தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடித்து சிறையில் தள்ளுவேன் என்று விஷால் சவால்விட்டதை பற்றியே பலரும் கேட்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











