Vishal - பயில்வான் ரங்கநாதனை போகிக்கு கொளுத்திட வேண்டும்.. விஷால் சொன்ன பதில் இதுவா?
சென்னை: Vishal on Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன் பற்றி விஷால்) பயில்வான் ரங்கநாதனை போகி பண்டிகையில் கொளுத்திவிட வேண்டும் என விஷால் அதிரடியாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகர் என்ற முகங்களை கொண்டவர் பயில்வான் ரங்கநாதன். பல காலம் சினிமா துறையில் இருப்பதால் அதை பற்றிய முழுவதும் தனக்கு தெரியும் என தொடர்ந்து சொல்லி பல விஷயங்கலை வீடியோவில் பேசுவார். ஆனால் அவர் பேசியது பேசுவது அனைத்துமே பொய் என பலர் தொடர்ந்து கூறிவருகின்றனர். இருந்தாலும் பயில்வான் தன்னுடைய போக்கை நிறுத்திக்கொள்ளவில்லை.

பதிலடி: பயிவான் ரங்கநாதன் பேச்சுக்கு பலர் அமைதியாக இருந்தாலும் ரேகா நாயர், ராதிகா, தயாரிப்பாளர் ராஜன் உள்ளிட்ட சிலர் தக்க பதிலடி கொடுத்திருக்கின்றனர். திருவான்மியூரில் வாக்கிங் சென்றபோது பயில்வானுடன் சண்டைக்கு சென்றார் ரேகா நாயர்; அதேபோல் ஒரு சினிமா நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ராஜன் பயில்வானை தனது பேச்சால் நேரடியாக வெளுத்துவாங்கினார். ராதிகாவோ பயில்வான் ரங்கநாதனை செருப்பால் அடித்தார் என்ற தகவலும் உண்டு.
விஷால் பற்றி பயில்வான்: இதற்கிடையே விஷாலுக்கும் லட்சுமி மேனனுக்கும் காதல் என்று தொடர்ந்து பேசப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், லட்சுமி மேனன் நடிகை என்பதை தாண்டி ஒரு பெண். அவரை களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதுமாதிரியான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டிருந்தார்.
அதேசமயம் விஷாலின் இந்த விளக்கத்துக்கு முன்னதாக ஒரு வீடியோவில் பேசியிருந்த பயில்வான் ரங்கநாதன், 'விஷாலும் லட்சுமி மேனனும் காதலித்தார்கள். இருவருக்கும் திருமணம் நடைபெறும் நிலைமை வரை சென்றது. ஆனால் திடீரென்று அவர்களது திருமணம் நின்றுவிட்டது. இதனால் லட்சுமி மேனன் தனது சொந்த ஊரான கேரளாவுக்கே திரும்ப சென்றுவிட்டார் என கூறியிருந்தார்.
கொளுத்த வேண்டும்?: இந்நிலையில் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பயில்வானின் பேச்சு குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டதாகவும் அதற்கு அவர் பதிலளித்ததாகவும் ஒரு தகவல் பரவியுள்ளது. அதாவது அவர் அளித்த பதிலில், "பயில்வான் ரங்கநாதனை போகியில் பழைய பொருட்களோடு சேர்த்து எரிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. யாரும் யாரை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் எல்லை மீறக்கூடாது.
இவரெல்லாம் பூமிக்கு பாரமாக இருக்கக்கூடிய ஆள். இவருக்கும் மனைவி, மகள் இருப்பார்தானே. அப்படி இருக்கும்போது ஏன் ஒரு பெண்ணைப் பற்றி தேவையில்லாமல் இப்படி பேச வேண்டும்" என குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது. விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி ப்ரோமோஷனுக்காக கொடுத்த பேட்டியில்தான் அவர் இப்படி பேசினாராம்.


Click it and Unblock the Notifications











