இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு: விஷால் விவகாரம் குறித்து அரவிந்த்சாமி கருத்து
Recommended Video

சென்னை: விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்து நடிகர் அரவிந்த் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக நிற்பதாக அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தார் நடிகர் விஷால். அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார்.

இதை எதிர்த்து பிரதமர் மோடியிடம் ட்விட்டர் மூலம் முறையிட்டுள்ளார் விஷால். தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது நியாயமில்லை என்று குமுறுகிறார்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
1. வேட்புமனுவில் முன்மொழிய 10 பேரை அழைத்து வருவது அவர் போன்ற வேட்பாளருக்கு கடினம் இல்லை.
2. அப்படியே ஏமாற்றியிருந்தாலும், இந்த விவகாரத்தில் அதற்கு காரணமே இல்லை. முன்மொழிந்துவிட்டு 24 மணிநேரத்திற்குள் தேர்தல் ஆணையத்தை அணுகி எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்கும்படி இல்லை.#gamespeopleplay


Click it and Unblock the Notifications











