Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடிகர் விஷால், கார்த்தி, நாசருக்கு கொலை மிரட்டல்..சினிமா வட்டாரத்தில் பரபரப்பு !
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான நடிகர் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோருக்கு அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்தவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியும், நாசர் தலைமையிலான ஒரு அணியும் போட்டி இட்டனர். இந்த தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வாக்கு எண்ணிக்கைக்கு தடைவித்தார். இதனால், தேர்தலில் பதிவான வாக்குகள் தனியார் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நாசர் தலைமையிலான அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தார். இதையடுத்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், நாசர் தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெற்று, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் பொருளாளராக கார்த்தி பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், தற்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மேலாளராக தர்மராஜ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நாசர், விஷால் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு நடிகர் சங்கத்தின் உறுப்பினராக உள்ள துணை நடிகர் ராஜதுரை என்பவர் வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த மே 27-ம் தேதி ஆடியோ ஒன்றை அனுப்பி உள்ளார்.
லத்தி படப்பிடிப்பில் விபத்துக்குள்ளான விஷால்.. ஷூட்டிங் பாதியில் நிறுத்தம் !
அந்த ஆடியோவில் சங்க நிர்வாகிகளை மிகவும் அசிங்கமாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் ராஜதுரை பேசியுள்ளார். இதனால் உடனே ராஜதுரை மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தான் எங்கள் முதல் பணி அதற்காகத்தான் இந்த தேர்தலில் போட்டியிட்டு வென்று இருக்கும் என்று வீர வசனம் பேசினார். மேலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுதான் எனக்கு திருமணம் என்றும் கூறியிருந்தார். ஆனால் இப்பொழுது எனக்கு என்ன என்று விஷாலும், அவரது குழுவும் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.