Don't Miss!
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Finance இவங்களுக்கு எல்லாம் ஜாக்பாட்.. பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டாம்..!
- News ஆஹா.. உபி-இல் பாஜகவுக்கு தலைவலி! ராஜ்புத் சமூகம் எடுத்த முடிவால் பெரிய சிக்கல்! கையை பிசையும் தலைகள்
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தெருநாயை ஹீரோவாக வைத்து படமெடுக்கும் விஷால்! விஷாலின் புதிய அவதாரம் இயக்குனர்!
Recommended Video
சென்னை: விஷால் இயக்கும் படத்தில் தெருநாய் தான் ஹீரோ என தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் பொதுவாக செல்ல பிராணிகள் மீது அதீத அன்பு கொண்டவர். கேரளாவில் தெருநாய்களை கொல்லும் முயற்சியை அரசு மேற்கொண்டபோது அதை எதிர்த்து போராட்டத்தில் குதித்தார்.
தற்போது தெருநாய்களை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படம் பற்றி கூறிய விஷால், இயக்குனராக வேண்டுமென்ற எண்ணம் எப்பொதுமே மனதில் ஓடிக்கொண்டே இருப்பதாகவும், இப்படத்தின் கதை கடந்த மூன்று வருடங்களாக மனதில் இருப்பதாகவும் கூறினார்.
நான் என்னுடைய இயக்குனர் நண்பர்களுக்கு இந்த கதையை சொன்னேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது. இப்படத்தின் முதற்கட்ட வேலையை ஜனவரியில் துவங்க உள்ளேன். இப்படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் நான் இன்னும் யாரையும் முடிவு செய்யவில்லை. இப்படத்தின் ஹீரோ ஒரு தெருநாய் தான். ஆனால் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ளது.
இப்படத்தில் நிறைய விலங்குகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். அதானால் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருக்கும் என சொல்லும் விஷால், 2016 ஆம் ஆண்டு வர்தா புயலில் பாதிக்கப்பட்ட தெருநாய் ஒன்றை மீட்டு வளர்த்து வருகிறார். இது ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என சொல்லும் விஷால் மனித வாழ்க்கையில் தெருநாய்களின் முக்கியத்துவத்தை பேசும் படமாகவும் இருக்கும் என்கிறார்.