Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
#விஷால்31 அப்டேட் வெளியானது.. சண்டைக்காட்சியுடன் தொடங்கிய படப்பிடிப்பு
சென்னை: விஷால் நடிப்பில் இந்த ஆண்டு சக்ரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் விஷாலின் அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
மகளின் வீடியோவை வெளியிட்ட குக் வித் கோமாளி கனி...அதுவும் என்ன வீடியோனு பாருங்க
தற்போது விஷாலின் 31வது படம் குறித்து புதிய அப்டேட் ஒன்றை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அடுத்த வெளியீடு
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் "எனிமி" படத்தில் நடித்துள்ளனர். கதாநாயகியாக மிருனாளினி நடிக்கிறார். இந்த படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கூடிய விரைவில் இந்த படம் வெளிவரவுள்ளது.
பிஸியாக விஷால்
இதையடுத்து புதுமுக இயக்குனர் இயக்கும் #விஷால்31,
அடங்கமறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் #விஷால்32, விஷாலே இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் 2ம் பாகம் என விஷாலுக்கு அடுத்தடுத்த படங்கள் உள்ள நிலையில் மிகவும் பிஸியாக உள்ளார் விஷால்.
விருதுகளை வென்றார்
தற்போது விஷாலின் 31வது படத்தை புது முக இயக்குனர்
து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இவர் எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும் படத்தை இயக்கி அதற்காக பல விருதுகளை வென்றுள்ளார். இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தடம் பதிக்கிறார்.
விஷால் ட்வீட்
கொரோனா பரவல் காரணமாக நின்று போன #விஷால்31 படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. அங்கு சண்டைக்காட்சிகள் உட்பட படத்தின் அனைத்து காட்சிகளையும் ஒரே கட்டமாக எடுத்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.