Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
#விஷால்31 அப்டேட் வெளியானது.. சண்டைக்காட்சியுடன் தொடங்கிய படப்பிடிப்பு
சென்னை: விஷால் நடிப்பில் இந்த ஆண்டு சக்ரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் விஷாலின் அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
மகளின் வீடியோவை வெளியிட்ட குக் வித் கோமாளி கனி...அதுவும் என்ன வீடியோனு பாருங்க
தற்போது விஷாலின் 31வது படம் குறித்து புதிய அப்டேட் ஒன்றை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அடுத்த வெளியீடு
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் "எனிமி" படத்தில் நடித்துள்ளனர். கதாநாயகியாக மிருனாளினி நடிக்கிறார். இந்த படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கூடிய விரைவில் இந்த படம் வெளிவரவுள்ளது.
பிஸியாக விஷால்
இதையடுத்து புதுமுக இயக்குனர் இயக்கும் #விஷால்31,
அடங்கமறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் #விஷால்32, விஷாலே இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் 2ம் பாகம் என விஷாலுக்கு அடுத்தடுத்த படங்கள் உள்ள நிலையில் மிகவும் பிஸியாக உள்ளார் விஷால்.
விருதுகளை வென்றார்
தற்போது விஷாலின் 31வது படத்தை புது முக இயக்குனர்
து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இவர் எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும் படத்தை இயக்கி அதற்காக பல விருதுகளை வென்றுள்ளார். இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தடம் பதிக்கிறார்.
விஷால் ட்வீட்
கொரோனா பரவல் காரணமாக நின்று போன #விஷால்31 படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. அங்கு சண்டைக்காட்சிகள் உட்பட படத்தின் அனைத்து காட்சிகளையும் ஒரே கட்டமாக எடுத்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.