விஷாலின் ‘கதகளி‘ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்!
நடிகர் விஷால் நடித்த கதகளி என்ற திரைப்படம் பொங்கல் நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் சிறுபான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் வண்ணம் வசனங்கள் அமைந்துள்ளதாகவும் அதை நீக்க வேண்டும் என்றும் கோரி தமிழ்நாடு வண்ணார் பேரவை பொது செயலாளரான கே.பி.மணிபாபா மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் பல சிறுபான்மை அமைப்பினரும் விஷாலிடம் நேரடியாகவும், பிறர் மனம் புண்படும்படியாக உள்ள வசனங்களை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை ஏற்ற விஷால் திரைப்பட தணிக்கை அதிகாரிகளின் ஒப்புதலுடன் கதகளி வில்லன் பேசும் 20 நொடி நீளமுள்ள அந்த காட்சியை நேற்று நீக்கிவிட்டார்.
அதற்காக தணிக்கை அதிகாரிகள் அளித்த சான்றிதழ் இது:



Click it and Unblock the Notifications











