Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விஷால் நடிக்கும் சக்ரா படம் டிராப் இல்லையாம்... விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்கிறது படக்குழு
சென்னை: விஷால் ஹீரோவாக நடித்துவந்த 'சக்ரா' படம் கைவிடப்படவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் விஷால் இப்போது 'துப்பறிவாளன் 2' படத்தில் நடித்துவருகிறார். இதை மிஷ்கின் இயக்கி வருகிறார். இதில் பிரசன்னா, ரகுமான், கவுதமி உட்பட பலர் நடிக்கின்றனர்.
விஷால் தனது சொந்த பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி சார்பில் இதைத் தயாரித்து வருகிறார்.
ஸ்ரத்தா ஶ்ரீநாத்
இந்நிலையில் அவர் அறிமுக இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கும் 'சக்ரா' படத்தில் நடித்து வந்தார். இதில் ஸ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மனோபாலா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
துப்பறிவாளன் 2
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது
இந்நிலையில் இந்தப் படத்தை பாதியில் விட்டுவிட்டு, துப்பறிவாளன் 2 படத்துக்காகச் சென்றார் விஷால். இதனால் சக்ரா கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது.
கைவிப்படவில்லை
இதுபற்றி விஷால் தரப்பில் கேட்டபோது, இந்தப் படம் கைவிப்படவில்லை. இதன் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. துப்பறிவாளன் 2 படத்துக்கு முன்பாகவே சக்ரா படம் ரிலீஸ் ஆகும்.
ஆனந்த் ஷங்கர்
இந்தப் படத்தை முடித்துவிட்டு, அரிமாநம்பி, இருமுகன் பட இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்க உள்ளார் என்று தெரிவித்தனர்.