சென்னை வெள்ளம்.... களமிறங்கினார் விஷால்!
சென்னை: 2015ம் ஆண்டு சென்னை பெரு வெள்ளத்தில் மிதந்தபோது தனது நட்பு நடிகர்களை அத்தனை பேரையும் அழைத்துக் கொண்டு களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடைகள், அத்தியாவசியப் பொருள்களைக் கொடுத்ததில் விஷாலின் பங்கு முக்கியமானது.
இடுப்பளவு வெள்ளத்தில் கூட இறங்கிப் போய் உண்மையான உணர்வுடன் அவரும் நண்பர்களும் உதவிகள் செய்தனர்.

இப்போது மீண்டும் சென்னை நகர், புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது. அரசு ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்தாலும், தன்னார்வலர்களும் களத்தில் குதித்துள்ளனர்.
நிலைமை அறிந்த விஷால் தானும் களமிறங்கியுள்ளார். இந்த முறை முன்னெச்சரிக்கையாக சினிமா பிரபலங்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் ஒன்றிணைத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ குழுவை உருவாக்கியுள்ளார். இதற்கென சில தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளார்.
7904084228 / 9710444442 / 9444188902 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைச் சொன்னால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் கிடைக்குமாறு விஷால் ஏற்பாடு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











