Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆர்டர் போட்ட விஷால்… விறுவிறுப்படையும் “வீரமே வாகை சூடும்“ ஷூட்டிங்!
சென்னை : விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது.
இதையடுத்து இத்திரைப்படம் டிசம்பரில் திரைக்கு வரும் என்று நம்பப்படுகிறது.
அரண்மனை 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு... குஷ்பு வெளியிட்ட அசத்தல் அப்டேட்
இப்படத்தை அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார்.
வீரமே வாகை சூடும்
நடிகர் விஷாலில் 31வது படமான வீரமே வாகை சூடும் படத்தில் நடித்து முடித்துள்ளார். து.ப சரவணன் இயக்கியுள்ள விஷால் 31 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி சென்னையில் சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடிக்கிறார்கள்.
கையில் உடைந்த பாட்டில்
இப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்ட ர் விஷாலின் பிறந்த நாள் அன்று வெளியானது. வீரமே வாகை சூடும் என்ற வித்தியாசமான தலைப்பை அனைவரும் பாராட்டினார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் கையில் உடைந்த பாட்டிலை வைத்துக் கொண்டு தலையில் ரத்தம் சொட்ட சொட்ட அமர்ந்து இருக்கிறார் விஷால்.
ஆர்டர் போட்ட விஷால்
இந்நிலையில், விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளதாக பதிவிட்டுள்ளார். இந்த படத்தை விரைவில் முடித்து விட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்த விஷால் திட்டமிட்டுள்ளாராம், இதனால், படக்குழுவினரிடம் படத்தை சீக்கிரமாக முடிக்க சொல்லி விஷால் ஆர்டர் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் சுறுசுறுப்புடன் படத்தை முடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இப்படம் டிசம்பரில் திரைக்கு வரும் என்று நம்பப்படுகிறது.
விஷால்32
இதையடுத்து, விஷால் நடிக்கும் 32வது படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கும் இப்படத்தில் நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கான பூஜை விஷாலின் பிறந்தநாள் அன்று போடப்பட்டது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்க உள்ளார்.
எனிமி
உயிர் நண்பரான விஷாலுடன் ஆர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். நடிகை மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆர்யாவை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வருகிறார் விஷால். ஹீரோ இவராக இருந்தாலும், வில்லனாக நடித்துள்ள ஆர்யா, விஷாலை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒவ்வொரு காட்சிகளிலும் நடித்திருந்தார் என ரசிகர்கள் கூறினர். இப்படம் ஆயுத பூஜைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.